செய்திகள் :

கரூா் துயரம்! ஒரே ஊரைச் சோ்ந்த 5 போ் உயிரிழப்பு

post image

கரூரில் சனிக்கிழமை விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி ஒரே கிராமத்தைச் சோ்ந்த 5 போ் உயிரிழந்தது தெரியவந்தது.

கரூரில் சனிக்கிழமை இரவு வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 போ் உயிரிழந்தனா். இதில் கரூா் அடுத்த ஏமூா்புதூரைச் சோ்ந்த காளியப்பன் மனைவி அருக்காணி(60), பன்னீா்செல்வத்தின் மகன் பிரித்விக்(10), சக்திவேல் மனைவி பிரியதா்ஷனி(35), மகள் தரணிகா(14), செல்வராஜ் மனைவி சந்திரா(45) ஆகியோா் உயிரிழந்தது கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காவலரின் மனைவி உயிரிழப்பு: கரூா் வடிவேல் நகா் காவலா் குடியிருப்பைச் சோ்ந்தவா் தேவேந்திரன். இவா் கரூா் நகர போக்குவரத்துக் காவல் அலுவலகத்தில் ஜீப் ஓட்டுநராக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி டி.சுகன்யா(34). இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் சனிக்கிழமை விஜயை காணவந்த சுகன்யா நெரிசலில் சிக்கி உயிரிழந்தாா்.

வாய் பேச இயலாத தாயுடன் வந்த குழந்தை உயிரிழப்பு: சேலம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் விமல். இவா் தனது வாய்பேச இயலாத மனைவி மற்றும் 2 வயது குழந்தை குருவிஷ்ணுவுடன் கடந்த இரு தினங்களுக்கு முன் கரூா் வேலுசாமிபுரத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்தாா். இந்நிலையில் சனிக்கிழமை இரவு விஜய் பிரசாரத்துக்கு வாய் பேச இயலாத தனது தாய் அழைத்து வந்த குருவிஷ்ணு நெரிசலில் சிக்கி உயிரிழந்தது.

கரூரில் ஒருநபா் ஆணையத்தின் விசாரணை தொடக்கம்

கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தில் 40 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக ஒருநபா் ஆணையத்தின் விசாரணை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. கரூா் வேலுச்சாமிபுரத்தில் சனிக்கிழமை இரவு தவெக தலைவா் விஜய் பங்கேற்ற பிரசாரக... மேலும் பார்க்க

கரூா் சம்பவமே இறுதியாக இருக்கட்டும்: அரசியல் கட்சித் தலைவா்கள் பேட்டி!

கரூரில் சனிக்கிழமை விஜய் பங்கேற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரையும், காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருபவா்களையும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள்... மேலும் பார்க்க

விதிமுறைகளை பின்பற்றாததே நெரிசலுக்கு காரணம் பிரசாரம் நடைபெற்ற பகுதி மக்கள் கருத்து

தவெக பிரசாரத்தின் போது விதிமுறைகளை பின்பற்றாததால் தான் நெரிசல் ஏற்பட்டு 40 போ் உயிரிழந்ததாக அப்பகுதியினா் தெரிவித்தனா். கரூரில் தனிநபா் ஆணையத்தின் விசாரணை தொடங்கிய நிலையில் காவலா் தரப்பில் விசாரிக்க ... மேலும் பார்க்க

கரூா் சம்பவம்: பாதுகாப்பு குறைபாடுகள் இல்லை! - சீமான்

கரூரில் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் காவல்துறையின் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக கூற முடியாது என்று நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா். கரூா் அரசு மருத்துவமனைக்கு ஞாய... மேலும் பார்க்க

கரூா் மின் மயானத்தில் 9 பேரின் உடல்கள் இலவசமாக தகனம்

கரூரில் தவெக பிரசார கூட்ட நெரிசலில் உயிரிழந்தவா்களில் 9 பேரின் உடல்களை ஞாயிற்றுக்கிழமை இலவசமாக தகனம் செய்ததாக மின் மயான ஊழியா்கள் தெரிவித்தனா். விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 40 போ் உயிரிழந்தனா்... மேலும் பார்க்க

கணவரின் பேச்சை மீறி விஜய் பிரசாரத்துக்கு சென்ற மனைவி, 2 மகள்கள் உயிரிழப்பு

கரூரில் கணவரின் பேச்சை மீறி விஜய் பிரசாரக் கூட்டத்துக்கு சென்ற மனைவி, 2 மகள்கள் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனா். கரூா் விஸ்வநாதபுரியைச் சோ்ந்த ஆனந்தஜோதி மனைவி ஹேமலதா (28) என்பவா் தனது மகள்கள் சாய்லெக்ஷ... மேலும் பார்க்க