செய்திகள் :

கர்நாடகத்தின் பெருமையாக இருப்போம்..! 3 மாதங்களுக்குப் பிறகு ஆர்சிபி பதிவு!

post image

மூன்று மாதங்களுக்குப் பிறகு ஆர்சிபி நிர்வாகம் தனது எக்ஸ் தளத்தில் முதல்முறையாக பதிவிட்டுள்ளது.

அதில் விரைவில் புதிய அறிவிப்பை வெளியிடுவோம் என்றும் கர்நாடகத்தின் பெருமையாக இருப்போம் என்று அறிவித்துள்ளது.

கொண்டாட்டமும் சோகமும்...

ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணி தனது முதல் கோப்பையை கடந்த சீசனில் ரஜத் படிதார் தலைமையில் வென்றது.

இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். அதற்குப் பிறகு எந்தப் பதிவும் இடாத நிலையில், தற்போது சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு பதிவிட்டுள்ளது.

ஆர்சிபியின் சின்னசாமி திடலில் இனிமேல் போட்டிகள் நடைபெறாதென நீதிமன்றமும் உதவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

ஜூன் 4-ஆம் தேதி எல்லாமே மாறிவிட்டது...

ஆர்சிபியின் பதிவில் கூறியிருப்பதாவது:

எங்களது அணியின் 12-ஆவது வீரர்களுக்கு (ரசிகர்களைக் குறிப்பிடுகிறார்கள்) இதயம் கனிந்த கடிதம்! சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு இங்குப் பதிவிடுகிறோம்.

அமைதியாக இருந்தது இல்லாமல் ஆக்கிவிடாது. அது துயரத்தினால் இருந்தது. இந்தக் காலக்கட்டத்தில் ஆற்றல், நினைவுகள், கணங்கள் என எல்லாமே நிறைந்திருந்தது. ஆனால், ஜூன் 4-ஆம் தேதி எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.

அந்த நாளில் எங்களது இதயங்கள் நொருங்கிவிட்டன. அப்போதிருந்து எங்களது அமைதி அந்தக் காலத்தைப் பிடித்திருக்க வைத்தது.

அக்கறையுடன் வந்திருக்கிறோம்...

அந்த அமைதியில் நாங்கள் துயருற்றோம், கவனித்தோம், கற்றுக்கொண்டோம். மெதுவாக, நாங்கள் நம்பும் ஒன்றை பொறுப்புடன் உருவாக்கினோம். அடப்படித்தான் ’ஆர்சிபி கேர்ஸ்’ உருவானது.

இது ரசிகர்களுக்காக மரியாதை, ஆறுதலைத் தாண்டி அவர்களது துயரத்தில் உடன் நிற்பதாகும். இந்த அமைப்பின் மூலம் ஆர்சிபி ரசிகர்களுக்கும் இந்தச் சமூகத்திற்கும் அர்த்தமுள்ள செயலாக அமையும்.

நாங்கள் இங்கு கொண்டாட வரவில்லை, அக்கறையுடன் வந்திருக்கிறோம். ஒன்றாக இணைந்து நடக்க வந்திருக்கிறோம். தொடர்ந்து கர்நாடகத்தின் பெருமையாக இருப்போம். ஆர்சிபி கேர்ஸ். எப்போதும் அப்படியாகவே இருப்போம் எனக் குறிப்பிட்டுள்ளது.

After three months, the RCB management has posted on its X (Twitter) site for the first time.

ஆசிய கோப்பை: ஒரு வாரத்துக்கு முன்பாகவே துபை செல்லும் இந்திய அணி!

இந்திய அணி ஆசிய கோப்பையில் விளையாடுவதற்காக செப்.4ஆம் தேதியே துபைக்குச் செல்லவிருப்பதாக பிசிசிஐ-இன் மூத்த உறுப்பினர் தெரிவித்துள்ளார். துபையில் வருகிற செப்.9ஆம் தேதி ஆடவருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் ப... மேலும் பார்க்க

அசத்தும் சாம் கரண்! சிஎஸ்கே வாழ்த்து!

இங்கிலாந்தில் விளையாடிவரும் சாம் கரண் சிறப்பாக விளையாடுவதால் சிஎஸ்கே அணி வாழ்த்தியுள்ளது. இதற்காக சாம் கரணுக்குச் சிறப்புப் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் சாம் கரண் (2... மேலும் பார்க்க

தில்லி பிரீமியர் லீக்: அறிமுகப் போட்டியில் அசத்திய ஆர்யவிர் சேவாக்!

விரேந்திர சேவாக்கின் மகன் ஆர்யவிர் சேவாக் தில்லி பிரீமியர் லீக்கில் அறிமுகமாகியுள்ளார். அறிமுகமான முதல் போட்டியிலேயே அதிரடியாக 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விரேந்திர சேவாக்கின் மூத்த மகன் ஆர்யவிர்... மேலும் பார்க்க

கேமரூன் கிரீன் 40 இடங்கள் முன்னேற்றம்: டாப் 2-இல் கில், ரோஹித் நீடிப்பு!

ஐசிசியின் ஒருநாள் பேட்டர்களின் தரவரிசைப் பட்டியலில் கேமரூன் கிரீன் 40 இடங்கள் முன்னேறியுள்ளார். இந்தியாவின் ஷுப்மன் கில், ரோஹித் சர்மா முதலிரண்டு இடங்களில் நீடிக்கிறார்கள். தென்னாப்பிரிக்காவுக்கு எதிர... மேலும் பார்க்க

ஆன்லைன் விளையாட்டு தடை: இந்திய வீரர்களுக்கு ரூ. 200 கோடி இழப்பு! தோனி, கோலி, ரோஹித்துக்கு அதிக பாதிப்பு!

பணம் செலுத்தி விளையாடப்படும் இணையவழி விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கும் மசோதாவால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அதிக பாதிப்பை சந்தித்துள்ளனர்.பணம் செலுத்தி விளையாடப்படும் இணையவழி விளையாட்டுகளுக்குத் தடை ... மேலும் பார்க்க

புற்றுநோய்: 6-ஆவது அறுவைச் சிகிச்சை செய்த மைக்கேல் கிளார்க்!

ஆஸி. முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தனக்கு ஆறாவது முறையாக புற்று நோய்க்கான அறுவைச் சிகிச்சை செய்ததாக பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினாலும் விழிப்புணர்வு வேண்டியே பதிவி... மேலும் பார்க்க