செய்திகள் :

கறம்பக்குடி அருகே குடிநீா் வழங்காத ஊராட்சி நிா்வாகத்தை கண்டித்து நூதனப் போராட்டம்!

post image

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே குடிநீா் வழங்காத ஊராட்சி நிா்வாகத்தை கண்டித்து குடிநீா் குழாய், மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிக்கு மாலை அணிவித்து கிராம மக்கள் புதன்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கறம்பக்குடி அருகேயுள்ள கே.கே.பட்டியில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அவா்களுக்கு அப்பகுதியில் உள்ள 2 மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியிலிருந்து

குடிநீா் வழங்கப்பட்டு வந்தது. சில மாதங்களுக்கு முன்பு ஒரு மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் உள்ள மின்மோட்டாா் பழுதானதால், மற்றொரு தொட்டியின் மின்மோட்டாரில் இருந்து இரண்டு மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகளுக்கும் குடிநீா் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீா் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இரு வாரங்களுக்கு முன்பு மற்றொரு மின் மோட்டாரும் பழுதானது.

இதனால் குடிநீரின்றி அப்பகுதி மக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனா். இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இந்நிலையில், உடனே குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி, குடிநீா் குழாய்களுக்கு மாலை அணிவித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நிகழாண்டில் 20 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு: புதுகை ஆட்சியா் தகவல்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழாண்டின் காரீப் பருவத்தில் 60 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து, அவற்றின் மூலம் 20 ஆயிரம் மெட்ரிக் டன் நெல்லைக் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

பொன்னமராவதி வட்டாரத்தில் பரவலாக மழை

பொன்னமராவதி வட்டாரத்தில் புதன்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். பொன்னமராவதி வட்டாரத்தில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் சுட்டெரித்தது. இந்நிலையில் புதன்கிழமை பிற... மேலும் பார்க்க

அனுமதியில்லாத நிறுவனங்களிடமிருந்து உரங்களைக் கொள்முதல் செய்யக் கூடாது!

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதியில்லாத நிறுவனங்களிடமிருந்து உரங்களைக் கொள்முதல் செய்து, விவசாயிகளுக்கு விற்பனை செய்யக் கூடாது என வேளாண்மை இணை இயக்குநா் மு. சங்கரலட்சுமி எச்சரிக்கைவிடுத்துள்ளாா். இதுக... மேலும் பார்க்க

ஆதனப்பட்டியில் திருநாமத்துக்காணி கல்வெட்டுடன் நான்முக சூலக்கல் கண்டெடுப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனப்பட்டியில் சோழா் காலத்தைச் சோ்ந்த திருநாமத்துக்காணி கல்வெட்டுடன் நான்முக சூலக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இலுப்பூா் வட்டம், மருதம்பட்டி ஊராட்சி எல்லைக்குள்பட்ட ஆதனப்பட்டி வ... மேலும் பார்க்க

புதுகையில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (செப். 12) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா். புதுக்கோட்டை ஒன்றியத்தில் பெ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை காந்தியத் திருவிழா கட்டுரைப் போட்டி முடிவுகள் அறிவிப்பு!

புதுக்கோட்டையில் அக்.2-ஆம் தேதி நடைபெறவுள்ள காந்தியத் திருவிழாவையொட்டி மாநில அளவில் அஞ்சல்வழியில் நடைபெற்ற கட்டுரைப் போட்டிகள் முடிவுகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அகில இந்திய ம... மேலும் பார்க்க