செய்திகள் :

கலவர வழக்கில் இம்ரான்கானின் மருமகன் ஷெர்ஷா கானுக்கு ஜாமீன்!

post image

மே 9 கலவர வழக்குத் தொடர்பாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் மற்றொரு மருமகன் ஷெர்ஷா கானுக்கு பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது ஊழல், பணமோசடி உள்பட 150-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுதொடர்பான ஒரு வழக்கில் அவரை கடந்த 2023-ம் ஆண்டு மே 9-ந்தேதி போலீஸார் அவரை கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறை தொடர்பாக பஞ்சாப் மாகாணத்தில் வசிக்கும் இம்ரான்கானின் மருமகன்கள் ஷாஹ்ரேஸ் மற்றும் ஷெர்ஷா கானை லாகூர் போலீசார் கைது செய்தனர்.

ஒருநாள் முன்னதாக ஷெர்ஷா கானின் சகோதரர் ஷாஹ்ரேஸ் கானுக்கு லாகூரில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து இன்று ஷெர்ஷாவுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

ஷெர்ஷா மற்றும் ஷாஹ்ரேஸ் இருவரும் இம்ரான் கானின் சகோதரி அலீமா கானின் மகன்கள் ஆவர்.

ஆகஸ்ட் 21 அன்று லாகூர் போலீஸார் இரு சகோதரர்களையும் கைது செய்தனர், இது "போலி வழக்கு" என்றும், கடந்த வார இறுதியில் அவர்களின் போலீஸ் காவல் முடிவடைந்த பின்னரும் இருவரும் சிறைக்கு அனுப்பப்பட்டனர் என்று அலீமா கூறினார்.

இந்த வழக்கு இன்று நடத்தப்பட்ட விசாரணையில், ஷெர்ஷாவின் வழக்குரைஞர், லாகூர் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில், தனது கட்சிக்காரருக்குஎதிரான வழக்குப் பதிவை அரசு தரப்பு இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்று வாதிட்டார்.

ஷெர்ஷாவுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டையும் நிரூபிக்கும் ஆதாரங்களைச் சமர்ப்பிக்கத் தவறியதால், சந்தேக நபரை வரம்பற்ற காலத்திற்கு சிறையில் வைத்திருக்க முடியாது என்று அவரது வழக்குரைஞர் வாதிட்டார். ஷெர்ஷா இம்ரான் கானின் மருமகன் என்பதால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்று அவர் கூறினார்.

வாதங்களைக் கேட்ட பிறகு, பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்ற நீதிபதி மன்சர் அலி கில், ஷெர்ஷாவை விடுவிக்க உத்தரவிட்டார், மேலும் 100,000 பவுண்டு ஜாமீன் பத்திரத்தைச் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

இம்ரான்கானின் மருமகன்கள் கைது செய்யப்பட்டதற்கு சர்வதேச மன்னிப்பு சபை மற்றும் பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தியிருந்தன, இது ஒரு "அரசியல் வேட்டை" என்றும் அவர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.

Pakistan's jailed former prime minister Imran Khan's another nephew, Shershah Khan, was granted bail by an Anti-Terrorism Court on Thursday in a case related to an attack on a senior military officer's house in Lahore during the May 9 riots.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நலமாக உள்ளார்: மருத்துவமனை அறிக்கை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நலமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. பஞ்சாப் முதல்வர் சோர்வு மற்றும் குறைந்த இதயத் துடிப்பு காரணமாக மொஹாலியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

கேரளத்தில் மனைவியின் கள்ளக் காதலனால் கணவன் கொலை !

கேரளத்தில் மனைவியின் கள்ளக் காதலனால் கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், புதூரில் ஷியாம் சுந்தரின் மனைவியும், அவரது குழந்தையும் கடந்த நான்கு ஆண்டுகளாக தனேஷுடன் வசி... மேலும் பார்க்க

பிரதமரின் மணிப்பூர் விசிட் 3 மணி நேரம்தானா?

இனமோதல் ஏற்பட்ட மணிப்பூருக்குச் செல்லவிருக்கும் பிரதமர் மோடியின் பயணத் திட்டம் பற்றி பாஜக வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.மணிப்பூரில் கடந்த 2023-இல் இனமோதல் ஏற்பட்டு பெரும் கலவரம் மூண்ட நிலை... மேலும் பார்க்க

மும்பையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி, 5 பேர் காயம்

மும்பையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது அறுந்து கிடந்த மின்சார கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலியானார். மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது சகினாகா பகுதியில் ஞா... மேலும் பார்க்க

கொல்கத்தா: இளம் பெண்ணை வீட்டிலிருந்து கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்கள்!

கொல்கத்தாவில் இளம் பெண்ணை வீட்டிலிருந்து கடத்தி நண்பர்கள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், ஹரிதேவ்பூர் பகுதியின் தெற்குப் பகுதியில் 20 வயது இள... மேலும் பார்க்க

ம.பி.யில் போலீசாருடன் சென்ற கார் ஆற்றில் விழுந்ததில் ஒருவர் சடலம் மீட்பு

மத்தியப் பிரதேசத்தில் போலீசாருடன் சென்ற கார் ஆற்றில் விழுந்ததில் ஒருவரின் சடம் மீட்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் மழைக்குப் பிறகு மூன்று போலீசாரை ஏற்றிச் சென்ற கார் சனிக்கிழ... மேலும் பார்க்க