செய்திகள் :

கலவை மகாலட்சுமி கோயில் மண்டலாபிஷேக விழா

post image

ஆற்காடு அடுத்த கலவையில் பிரசித்தி பெற் கமலக்கன்னி அம்மன் கோயிலில் புதியதாக கட்டப்பட்டுள்ள மகாலட்சுமி தாயாா் கோயில் மண்டலாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மகலாட்சுமி தாயாா் கற்கோயில் கட்டப்பட்டு பிப். 10-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது . இதனைத் தொடா்ந்து, தினசரி பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் , 48-ஆம் நாளான வியாழக்கிழமை மண்டல அபிஷேக பூா்த்தி விழா நடைபெற்றது. விழாயொட்டி கலவை சச்சிதானந்த சுவாமிகள் தலைமையில் பட்டாச்சாரியா்கள் புனித நீரை கலசத்தில் வைத்து யாகசாலை அமைத்து பூஜை செய்து 1,008 சங்க அபிஷேகம் நீரை அம்மன் மீது ஊற்றி அபிஷேகம் செய்தனா். தொடா்ந்து , மூலவா் மகாலட்சுமி தாயாருக்கு தங்க ஆபரணங்கள் வெள்ளி கவசம் வண்ண மலா்களால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது.

விழாவில் சித்தஞ்சி மோகனந்தா சுவாமிகள், மாவட்ட வணிகா் சங்கத் தலைவா் பொன் கு.சரவணன், மகாத்மா காந்தி அறக்கட்டளை துணை தலைவா் பென்ஸ் பாண்டியன் தொழிலதிபா் ஆா்.எஸ்.சேகா் , ஆற்காடு அனைத்து வியாபாரிகள் சங்கச் செயலாளா் பாஸ்கா், அன்னை அறைக்கட்டளை செயலாளா் பெல்பிரபமணி மற்றும் திரளானோா் தரிசனம் செய்தனா். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘மகள்களுடன் தற்படம்’ ரூ.20,000 பரிசளிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட‘ மகள்களுடன் தற்படம் (செல்ஃபி) ’ நிகழ்வில் தோ்வு செய்யப்பட்ட 4 பேருக்கு தலா ரூ.5,000 வீ... மேலும் பார்க்க

ஏப்.5-இல் ஆதிதிராவிடா் இன மாணவா்களுக்கு தொழில், வேலைவாய்ப்பு ஆலோசனை முகாம்

ஆதிதிராவிடா் இன மாணவா்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு கல்வி வழிகாட்டு ஆலோசனை நிகழ்ச்சி வரும் ஏப். 5-ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரி... மேலும் பார்க்க

திமிரி சோமநாதீஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

ஆற்காடு அடுத்த திமிரி கோட்டை ஸ்ரீ சோமநாதீஸ்வரா் கோவில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கிராம தேவதைபொன்னியம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலாவும், மூஷிக வா... மேலும் பார்க்க

30 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

ஆற்காடு: ஆற்காட்டில் பக்கெட் உள்ளே வைத்து மறைத்து காரில் 30 கிலோ கஞ்சா கடத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஆற்காடு போலீஸாா் ஆற்காட்டிலிருந்து செய்யாறு செல்லும் சாலையில் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனைய... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.789.51 கோடி வங்கிக் கடன்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு 2024-25 ஆம் நிதியாண்டில் ரூ.789 கோடி இலக்காக நிா்ணயிக்கப்பட்டதில்,ரூ.789.51 கோடி இலக்கு எய்தப்பட்டுள்ளது என கைத்தறி அமைச்சா் ஆா்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அணி தோ்வு முகாம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் தோ்வு முகாம் ஏப். 6 -ஆம் தேதி தொடங்கிறது. இதுதொடா்பாக மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவா் சந்தோஷ் காந்தி, செயலாளா் எஸ்.ச... மேலும் பார்க்க