செய்திகள் :

'கலெக்டர், எஸ்.பி. நான் சொல்றததான் கேட்கணும்' - தருமபுரி திமுக மாவட்டப் பொறுப்பாளர் பேச்சு

post image

மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., அதற்கு கீழ் உள்ள அத்தனை நிர்வாகமும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும் என தருமபுரி திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் தர்மசெல்வன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தர்மசெல்வன் நேற்று(வியாழக்கிழமை) தருமபுரியில் நடைபெற்ற அக்கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசிய ஆடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இதையும் படிக்க | 'பெண்களின் தலை வழுக்கையானதற்கு கோதுமை காரணமல்ல' - விவசாயிகள் மறுப்பு!

அவர் பேசியதாவது:

"நான் சொல்வதை கேட்கவில்லையென்றால் எந்த அதிகாரியும் இருக்கமாட்டான். இதில் யாரும் தலையிட முடியாது. நீங்கள் நினைக்கிற ஆள்களை மாற்ற முடியாது. நான் கடிதம் கொடுத்தால்தான் மாற்ற முடியும். அதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

கலெக்டர், எஸ்.பி., அதற்கு கீழ் உள்ள அத்தனை நிர்வாகமும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். கேட்கவில்லையென்றால் அவர்கள் அந்த பதவியில் இருக்கமாட்டார்கள். இதை நான் செய்வேன். எந்த அதிகாரியும் என்னை மீறி எதுவும் செய்ய முடியாது.

விளையாடுவதற்கு இது இடமல்ல. என்னிடம் விளையாட முடியாது. அப்படி விளையாடினால் அவன் கதை முடிந்தது. தலைவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று தெரியும். அதிகாரி யாரும் என் பேச்சைக் கேட்கவில்லை என்றால் லெட்டர்பேடில் எனக்கு கடிதம் கொடு என்று தலைவர் சொல்லியிருக்கிறார்.

மாவட்ட ஆட்சியர் உள்பட. பிடிஓ அலுவலகத்தில் நடைபெறும் ஏ டு இசட் அனைத்து விஷயங்களும் எனக்குத் தெரிந்தாக வேண்டும். இதற்கு முன்னால் இருந்தவர்கள் எப்படி என்று எனக்குத் தெரியாது. ஆனால், இனி இப்படிதான்" என்று பேசியுள்ளார்.

மாவட்டப் பொறுப்பாளர் தர்மச்செல்வன் பேசியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

சில நாள்களுக்கு முன்னர்தான் திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக இருந்த தடங்கம் சுப்பிரமணியனுக்குப் பதிலாக தர்மச்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | புகைபிடிக்காதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய்! காரணம் என்ன?

காவல் துறைக்கு அழுத்தம் தருகிறது அரசு: சீமான்

காவல் துறை விசாரணையில் புதிய கேள்விகள் ஏதும் இல்லை என்றும் பழைய கேள்விகளே கேட்கப்பட்டதாகவும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். காவல் துறையினர் மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் ஒத்துழ... மேலும் பார்க்க

கல்வியில் தமிழ்நாடு முன்னிலை; சீர்குலைக்கும் முயற்சியில் மத்திய அரசு: முதல்வர்

மும்மொழி கொள்கைக்கு எதிரான அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுகவும் பங்கேற்பவிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.முதல்வர் மு.க. ஸ்டாலினின் 72 ஆவது பிறந்தநாளையொட்டி, ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ ம... மேலும் பார்க்க

விசாரணைக்கு ஆஜரானார் சீமான்!

நடிகை அளித்த பாலியல் புகார் வழக்கு விசாரணைக்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஆஜரானார். வழக்கு தொடர்பாக காவல் துறை 2 முறை சம்மன் அனுப்ப... மேலும் பார்க்க

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மாற்றம்!

மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதியை மாற்றம் செய்து தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ஈரோடு மாநகராட்சி ஆணையராக இருந்த ஸ்ரீகாந்த் மயிலாடுதுறை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். மயிலாடுதுறை ஆட்சியரு... மேலும் பார்க்க

மயிலாடுதுறை ஆட்சியருக்கு அண்ணாமலை கண்டனம்

மூன்றரை வயது குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் மயிலாடுதுறை ஆட்சியருக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ள் தளப் பதிவில், சீர்காழியில், மூன்றரை... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலினுடன் மு.க.அழகிரி சந்திப்பு

முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அவரது அண்ணன் மு.க.அழகிரி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை இந்த சந்திப்பு நடைபெற்றது. முதல்வர் ஸ்டா... மேலும் பார்க்க