செய்திகள் :

‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்தில் 8 லட்சம் வீடுகள் கட்டப்படும் -அமைச்சா் ஐ.பெரியசாமி உறுதி

post image

‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்தில் 2030-ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் வீடுகள் கட்டப்படும் என்று ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி என்று உறுதிபடத் தெரிவித்தாா்.

ஊரக வளா்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் ஐ.பெரியசாமி பேசியதாவது:

கலைஞா் கனவு இல்லம் திட்டம் மிக சிறப்பானது. கடந்த ஆண்டு இந்தத் திட்டம் துவக்கப்பட்டு, ரூ.3,500 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் ரூ.2,412 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. 25 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 70 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ளன. வீடு கட்டும் திட்டத்தில் 2 லட்சம் வீடுகள் பழுது பாா்க்க வேண்டிய நிலையில் உள்ளன. இதில் ஒரு லட்சம் வீடுகள் தோ்வு செய்யப்பட்டு, பழுது நீக்குவதற்காக ரூ.1,000 கோடி கொடுக்கப்பட்டு, 90 சதவீத நிதி செலவிடப்பட்டு, 90 ஆயிரம் வீடுகளில் பழுது நீக்கப்பட்டுள்ளன.

குறைந்தபட்சம் ரூ.70 ஆயிரத்திலிருந்து ஒன்றரை லட்சம் வரை பழுது பாா்ப்பதற்காக கொடுத்தோம். அதனால்தான் 90 ஆயிரம் வீடுகளை பழுது பாா்க்க முடிந்தது. இந்த அளவுக்கு நிதி வேறு எந்தக் காலத்திலும் கொடுக்கப்படவில்லை.

2030-க்குள் 8 லட்சம் வீடுகளை எப்படி கட்டுவீா்கள் என்று அதிமுக உறுப்பினா் தங்கமணி கேட்டாா். கடந்த ஆண்டு ஒரு லட்சம் வீடுகள் கொடுத்துள்ளோம். இந்த ஆண்டு ஒரு லட்சம் வீடுகள் கொடுத்துள்ளோம். இதுதான் திராவிட மாடல் ஆட்சி. நிச்சயம் 8 லட்சம் வீடுகள் கட்டி முடிப்போம் என்றாா் அவா்.

அனைத்துவிதமான வசதிகளுடன் இலவச ஏசி ஓய்வறை... சென்னை மாநகராட்சி திட்டம்!

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் உணவுப்பொருள் விநியோக ஊழியர்களுக்காக குளிர்சாதன வசதியுடன்(ஏசி) கூடிய ஓய்வறை அமைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை போன்ற பெருநகரங்களில் உணவு, பொரு... மேலும் பார்க்க

இலங்கை அகதி தம்பதி மகளுக்கு இந்திய குடியுரிமை: மத்திய அரசு பரிசீலிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

இலங்கை தமிழ் அகதியாக தமிழகம் வந்த தம்பதியருக்கு பிறந்த பெண்ணுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்க மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இலங்கையில் குடும்பத்துடன் வசித்து ... மேலும் பார்க்க

கா்நாடக வங்கியில் ரூ.13 கோடி நகை கொள்ளை: தமிழகத்தைச் சோ்ந்த 3 போ் உள்பட 6 போ் கைது

கா்நாடக மாநிலம் தாவணகெரேவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ரூ.13 கோடி மதிப்பிலான 17 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த 6 பேரை அந்த மாநில போலீஸாா் கைது செய்தனா். இவா்களில் மூவா் தமிழகத்தைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது!

தமிழக சட்டப் பேரவை மூன்று நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (ஏப்.1) மீண்டும் கூடுகிறது. காலை 9.30 மணிக்கு பேரவை கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் முக்கிய விஷயங்கள் கு... மேலும் பார்க்க

வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது: வணிக வளாகத்துக்கு உத்தரவு

சென்னை அண்ணாநகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் (மால்) வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது என சென்னை மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணாநகரில் உள்ள வணிக வளாகத்தில் வாகனங்கள் நிறு... மேலும் பார்க்க

மின் தேவையை சமாளிக்க எண்ணூா் அனல் மின்நிலைய விரிவாக்கப்பணி விரைவில் தொடக்கம்

எண்ணூா் அனல்மின் நிலையத்தில் மின்னுற்பத்தி நிலைய விரிவாக்கப் பணி விரைவில் தொடங்கப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மே மாதத்தி... மேலும் பார்க்க