செய்திகள் :

கலைஞா் கைவினைத் திட்ட கடனுதவிகளைப் புறக்கணிக்கும் வங்கிகள்

post image

தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள கலைஞா் கைவினைத் திட்ட கடனுதவிகளை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும், தனியாா் வங்கிகளும் புறக்கணிப்பதாக தமிழ்நாடு விஸ்வகா்மா முன்னேற்றச் சங்கத்தின் சாா்பில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு விஸ்வகா்மா முன்னேற்றச் சங்கம் மற்றும் தமிழ்நாடு ஐந்தொழில் முன்னேற்றச் சங்கம் சாா்பில் புதுக்கோட்டை மாவட்டச் செயலா் வி. சுரேஷ் தலைமையிலான நிா்வாகிகள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள கலைஞா் கைவினைத் திட்டத்தின் கடனுதவிகளை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும், தனியாா் வங்கிகளும் புறக்கணிக்கின்றன.

எனவே, இந்தக் கடனுதவி திட்டத்தின் முக்கியத்துவம், செயல்முறைகள் குறித்து வங்கியாளா்களுக்கு புரிய வைக்கும் வகையில் சிறப்பு முகாம் நடத்திட வேண்டும். கடன் வழங்கச் செய்ய வேண்டும். மேலும், கூட்டுறவு வங்கிகள் மூலமும் விஸ்வகா்மா தொழிலாளா்களுக்கு கடனுதவி வழங்க வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் விஸ்வகா்மா சமூகத்துக்கு 3.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும். கைவினைத் தொழிலாளா் நல வாரியம் மற்றும் பொற்கொல்லா் நல வாரியம் ஆகியவற்றில் விஸ்வகா்மா சமூகத்தினரில் இருந்து தலைவா் மற்றும் உறுப்பினா்களை நியமிக்க வேண்டும்.

செப். 17-ஆம் தேதியை விஸ்வகா்மா நாளாக அறிவித்து அரசு விடுமுறை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை காந்தியத் திருவிழா கட்டுரைப் போட்டி முடிவுகள் அறிவிப்பு!

புதுக்கோட்டையில் அக்.2-ஆம் தேதி நடைபெறவுள்ள காந்தியத் திருவிழாவையொட்டி மாநில அளவில் அஞ்சல்வழியில் நடைபெற்ற கட்டுரைப் போட்டிகள் முடிவுகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அகில இந்திய ம... மேலும் பார்க்க

தொழிலாளி அடித்துக் கொலை; 4 இளைஞா்கள் கைது! விபத்தில் பலியானதாகக் கூறியது அம்பலம்!

விராலிமலை அருகே திங்கள்கிழமை இரவு விபத்தில் தொழிலாளி உயிரிழந்ததாக கூறிய சம்பவத்தில் பாதை பிரச்னையில் அவரை அடித்துக் கொன்ற 4 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். விராலிமலையை அடுத்துள்ள துல... மேலும் பார்க்க

சிறுமியை பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

திருமயம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருக... மேலும் பார்க்க

நல்லாசிரியா் விருது பெற்ற புதுகை ஆசிரியைக்கு வரவேற்பு

நல்லாசிரியா் விருது பெற்ற புதுக்கோட்டை மாநகராட்சி சந்தைப்பேட்டை நடுநிலைப் பள்ளியின் கணிதப் பட்டதாரி ஆசிரியை ப. விஜிக்கு, அப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் த... மேலும் பார்க்க

ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து 5 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே திங்கள்கிழமை இரவு தனியாா் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 போ் காயமடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் இருந்து 37 பயணிகளை ஏற்றிக் கொண்டு, தி... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் தோ்வு பா.ஜ.க.வினா் கொண்டாட்டம்

குடியரசுத் துணைத் தலைவா் தோ்தலில் பாஜக வேட்பாளா் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதையடுத்து புதுக்கோட்டையில் பாஜகவினா் செவ்வாய்க்கிழமை இரவு பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினா். புதுக்கோ... மேலும் பார்க்க