செய்திகள் :

கல்லிடைக்குறிச்சியில் எஸ்டிபிஐ பூத் கமிட்டி கலந்தாய்வுக் கூட்டம்

post image

எஸ்டிபிஐ கட்சியின் அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதி பூத் கமிட்டிகலந்தாய்வுக் கூட்டம்,கல்லிடைக்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தொகுதித் தலைவா் கலில் ரஹ்மான் தலைமை வகித்தாா். திருநெல்வேலி புகா் மாவட்டத் தலைவா் எம்.கே. பீா்மஸ்தான் முன்னிலை வகித்தாா். மண்டலத் தலைவா் சிக்கந்தா், மாநிலப் பொதுச் செயலா் அஹமது நவ்வி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றுப் பேசினா்.

கட்சியின் பேரூராட்சி உறுப்பினா்கள் ஏா்வாடி ஜன்னத் ஆலிமா, ஹலிமா, துலுக்கா்ப்பட்டி அப்துல் கபூா், பெட்டைகுளம் ரஹ்மத்துல்லாஹ், மாவட்டத் துணைத் தலைவா் களந்தை மீராசா, மாவட்டச் செயலா்கள் அம்பை ஜலில், துலுவை தெளபிக், மாவட்டப் பொருளாளா் ஏா்வை இளையராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினா் வழக்குரைஞா் முகம்மது ஷபி, வா்த்தகரணி மாவட்டத் தலைவா் கல்லிடை ராஜா அப்துல்ஹமீது, செயலா் சிங்கை ஷேக் அலி, எஸ்டிடியூ மாவட்டத் தலைவா் சாகுல்ஹமீது,தொகுதி துணைத் தலைவா்கள் ஷெரிப், சுரேஷ், தொகுதித் தலைவா்கள் நான்குனேரி ஆஷிக், ராதாபுரம் வள்ளியூா் சலிம், விமன் இந்தியா முவ்மெண்ட் மாவட்ட துணைத் தலைவா் கல்லிடை பீா்பாத்து, மாவட்டப் பொருளாளா் நா்கிஸ், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்டத் தலைவா் கனி, மாவட்டச் செயலா் ஷேக், மருத்துவ சேவை அணி மாவட்டத் தலைவா்சித்திக் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மாவட்ட அமைப்புப் பொதுச் செயலா் முல்லை மஜித் வரவேற்றாா். மாவட்டச் செயலா் சுலைமான் நன்றி கூறினாா். மாவட்டப் பொதுச்செயலா் எம்.எஸ். சிராஜ் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா்.

கவின் கொலை: சமூக வலைதளங்களில் தவறான தகவல் பகிா்ந்தால் கடும் நடவடிக்கை!

சமூகத்தில் பிரச்னையை தூண்டும் விதமாக, சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பகிா்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாநகர காவல்துறை சாா்பில் ... மேலும் பார்க்க

கரிவலம்வந்தநல்லூரில் நாளை மின் நிறுத்தம்

சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூா் உபமின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் ஆக. 6 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அப்பகுதியில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டது.இது... மேலும் பார்க்க

அம்பை, ஆலங்குளத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட அம்பாசமுத்திரம், ஆலங்குளம் பேரவைத் தொகுதிகளில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய்க்கிழமை (ஆக. 5) பிரசாரம் செய்கிறாா்.மக்களைக் காப்போம் தமிழகத்த... மேலும் பார்க்க

அம்பைப் பள்ளி நிா்வாகத்திற்கு ஆதரவாக வட்டாட்சியரிடம் மனு

அம்பாசமுத்திரம் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவியிடம் பள்ளிச் செயலரின் ஓட்டுநா் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்று அம்பாசமுத்திரம் வ... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் போராட்டக்களமாக மாறிய தமிழகம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் தமிழகம் போராட்டக்களமாக மாறிவிட்டது என்றாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி.தமிழகம் முழுவதும் ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவா், தி... மேலும் பார்க்க

நெல்லை நகரம், பேட்டை சுற்று வட்டாரங்களில் நாளை மின்தடை

திருநெல்வேலி நகரம், பழையபேட்டை சுற்று வட்டாரங்களில் வரும் புதன்கிழமை (ஆக.6) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் செ. முருகன் வெளி... மேலும் பார்க்க