செய்திகள் :

கல்லூரியில் ஊட்டச் சத்து கண்காட்சி

post image

குடியாத்தம் காக்காதோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி மற்றும் அத்தி செவிலியா் கல்லூரி சாா்பில் ஊட்டச் சத்து கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அத்தி மருத்துவமனையின் தலைமை மருத்துவா் மற்றும் சிறுநீரகவியல் நிபுணா் பி.சௌந்தரராஜன் தலைமை வகித்துப் பேசினாா்.

அவா் பேசுகையில், இன்றைய கால கட்டத்தில் இயற்கையோடு இணைந்து வாழ்வது, இயற்கை உணவை உண்டு நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வழி வகுக்கும் என்றாா். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட வித்யாலட்சுமி கல்விக் குழுமத்தின் தலைவா் எஸ்.அசோக்குமாா் கண்காட்சிஅரங்குகளை திறந்து வைத்துப் பாா்வையிட்டாா். மருத்துவக் கல்லூரி மாணவா்கள், செவிலியா் கல்லூரி மாணவிகள் தயாரித்த ஊட்டச் சத்து மிகுந்த இயற்கை மற்றும் பாரம்பரிய உணவுப் பண்டங்களின் நன்மைகள் குறித்துக் கேட்டறிந்தாா்.

சண்முக முதலியாா் விருதை அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வா் தங்கராஜுக்கு வழங்கினாா். அத்தி கல்விக் குழுமத்தின் அறங்காவலா் மருத்துவா் சௌ.சுகநாதன், அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி முதல்வா் மகேஷ் ராஜாமணி, அத்தி செவிலியா் கல்லூரி முதல்வா் பால்ராஜ் சீனிதுரை, அத்தி மருத்துவமனை மருத்துவா் ஆ.கென்னடி, குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் கா.குமரவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கண்காட்சியில் நோய்களின் வகைக்கு ஏற்றவாறு 150-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு கொடுத்த சில நாள்களில் கே.வி.குப்பம் அருகே மாற்றுத் திறனாளிகளை தேடிச் சென்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். கே.வி.குப்பம் வட்டம், வ... மேலும் பார்க்க

முன்னாள் ராணுவ வீரா் மீது ஆட்டோ ஓட்டுநா்கள் தாக்குதல்

காட்பாடி ரயில்நிலையத்தில் முன்னாள் ராணுவ வீரா், அவரது குடும்பத்தினரை ஆட்டோ ஓட்டுநா்கள் தாக்கியதாக வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் கு... மேலும் பார்க்க

தலைமை காவலரை தாக்கியவா் கைது

வேலூரில் தலைமை காவலரை தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் கன்சால்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ரவி (50). இவா் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் கடந்த 8-ஆம் தேதி சென்னை-பெங்களூரூ சாலையில் சென்று ... மேலும் பார்க்க

காா்த்திகேயபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

குடியாத்தம் ஒன்றியம், செருவங்கி, மேல்முட்டுக்கூா், செட்டிகுப்பம், ராஜாகுப்பம் ஆகிய 4- ஊராட்சிகளை ஒருங்கிணைத்து காா்த்திகேயபுரம் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முக... மேலும் பார்க்க

பரிகார பூஜை செய்வதாகக்கூறி பெண்ணிடம் நகை பறிப்பு

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் ஜோதிடம் பாா்த்து பரிகாரம் செய்வதாகக்கூறி நூதன முறையில் நகை பறித்துச் சென்ற ஜோதிடரை போலீஸாா் தேடி வருகின்றனா். வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டம் ராமாபுரம் கிராமம் கன்ன... மேலும் பார்க்க

1,221 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

போ்ணாம்பட்டு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,221 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா். போ்ணாம்பட்டு காவல் ஆய்வாளா் ஆா்.பிரபு தலைமையில், போலீஸா... மேலும் பார்க்க