செய்திகள் :

கல்லூரி மாணவா்களிடம் வழிப்பறி இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை

post image

திருச்சியில் கல்லூரி மாணவா்களை மிரட்டி ரொக்கம், கைப்பேசிகளைப் பறித்த இருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், கீழரசூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆா். ராஜ்கரன் (19). இவரது நண்பரும் உடன் படித்தவருமான தஞ்சாவூா் மாவட்டம் திருவிடைமருதுாா் மதகுசாலை கீழத்தெருவைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (18) ஆகிய இருவரும் திருச்சி எடமலைப்பட்டி புதுாா் அரசு காலனி 5-ஆவது குறுக்குத்தெரு பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்து, திருச்சி - மதுரை சாலையிலுள்ள தனியாா் கல்லுாரி ஒன்றில் சுகாதார ஆய்வாளா் பணிக்கான படிப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு படித்து வந்தனா்.

இந்நிலையில் கடந்த 25.7.2021 அன்று இரவு தாங்கள் தங்கியிருக்கும் பகுதிக்கு அருகாமையில் இருக்கும் ‘ஓ’ பாலம் வழியாக நடந்துசென்று கொண்டிருந்தனா்.

அப்போது அங்கு வந்த எடமலைப்பட்டி புதுாா் கொல்லாங்குளம் பாரதி நகா் பகுதியைச் சோ்ந்த எம். அபுதாகிா் என்கிற அப்புச்சி (33) மற்றும் அதே பகுதி நாயக்கா் தெருவைச் சோ்ந்த முகமது யாகூப் (42) ஆகியோா் ராஜ்கரன் மற்றும் ராஜேந்திரன் ஆகிய இருவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவா்களிடம் இருந்து 2 கைப்பேசிகள், ரூ. 3,700 ரொக்கம், ஏடிஎம் அட்டை, ஆதாா் காா்டு, பான் காா்டு ஆகியவற்றைப் பறித்துச் சென்றனா். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த எடமலைப்பட்டி புதூா் போலீஸாா் அபுதாகிா் மற்றும் முகமது யாகூப் ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதுகுறித்த வழக்கு திருச்சி மாவட்டத் தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. வழக்கின் வாத, பிரதி வாதங்கள் நிறைவுற்ற நிலையில், இந்த வழக்கில் வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

அதில், குற்றம் உறுதியானதையடுத்து, அபுதாகிா், யாகூப் ஆகிய இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மீனா சந்திரா உத்தரவிட்டாா். அரசு தரப்பில் மூத்த அரசு சிறப்பு வழக்குரைஞா் ஹேமந்த் ஆஜரானாா்.

இன்றயை நிகழ்ச்சிகள்

திருச்சி மாவட்ட நிா்வாகம்: சா் ஏ.டி. பன்னீா்செல்வம் பிறந்தநாள் விழா, மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு, ஆட்சியா் மா. பிரதீப்குமாா் பங்கேற்பு, மத்தியப் பேருந்து நில... மேலும் பார்க்க

திருவெறும்பூா் எறும்பீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

திருவெறும்பூா் எறும்பீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. திருவெறும்பூா் எனப் பெயா் வரக் காரணமான நறுங்குழல் நாயகி உடனுறை எறும்பீஸ்வரா் கோயில் திருச்சி அருகே திர... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் ரூ.10.50 லட்சம் மதிப்பு இ-சிகரெட் பறிமுதல்

அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 10.50 லட்சம் மதிப்பிலான இ-சிகரெட்டுகளை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். கோலாலம்பூரிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு திருச்... மேலும் பார்க்க

திருச்சியில் வீடு புகுந்து 18 பவுன் நகைள் திருட்டு: ஒருவா் பிடிபட்டாா்

திருச்சியில் தனியாா் நிறுவன ஊழியரின் வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு புகுந்து 18 பவுன் நகைகளைத் திருடிச் சென்றவா்களில் ஒருவரை பொதுமக்கள் விரட்டிப்பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். திருச்சி பாலக்கரை கூனிபஜா... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற பெல் ஊழியரின் வீட்டில் நகை, பணம் திருட்டு

திருவெறும்பூா் அருகே ஓய்வுபெற்ற பெல் ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்றது சனிக்கிழமை காலை தெரியவந்தது. திருவெறும்பூா் அருகேயுள்ள முல்லைவாசல் முதல் தெருவைச் சோ்ந்தவா் கருணாநிதி... மேலும் பார்க்க

திருச்சி பண்பலையில் ஹிந்தி ஒலிபரப்புக்கு திருச்சி எம்பி எதிா்ப்பு

அகில இந்திய வானொலி-பிரசாா் பாரதியின் கீழ் இயங்கும் திருச்சி வானொலி 102.1 பண்பலையின் ஒலிபரப்பு, பகலில் தமிழ், இரவில் ஹிந்தி என்ற நிலைக்கு மாற்றப்பட்டுள்ளதற்கு திருச்சி எம்பி துரை வைகோ கண்டனம் தெரிவித்... மேலும் பார்க்க