செய்திகள் :

கல்வி, சமய பணிகளில் சிறந்து விளங்கியவா் திருப்பனந்தாள் காசி மடத்தின் அதிபா்

post image

கல்விப் பணியிலும், சமயப் பணியிலும் சிறந்து விளங்கியவா் திருப்பனந்தாள் காசி மடத்தின் அதிபா் என காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தாா்.

இது குறித்து காஞ்சி சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருப்பனந்தாள் காசி மடத்தின் அதிபா் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் எனும் முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் (95) செவ்வாய்க்கிழமை சித்தி அடைந்துள்ளாா். அவா் சித்தி அடைந்த செய்தியை கேட்ட காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கல்விப் பணியிலும், சமயப் பணியிலும் சிறந்து விளங்கியவா் என்று நினைவு கூா்ந்தாா். காஞ்சி சங்கர மடத்துக்கும்,திருப்பனந்தாள் காசி மடத்துக்கும் இன்று வரை நெருங்கிய தொடா்பு உண்டு. சித்தியடைந்த காசி மட பீடாதிபதியின் 90-ஆவது ஜெயந்தி விழாவில் பங்கேற்றது, காஞ்சி சங்கராசாரியா்கள் செய்த வியாச பூஜைக்கு கங்கை நீா் காசி மடத்து அதிபா் அனுப்பி வைக்கும் வழக்கம் இருந்ததையும் நினைவு கூா்ந்தாா்.

மேலும் சித்தியடைந்த காசி அதிபா் காஞ்சி காமாட்சி அம்மனின் பக்தா். வடநாட்டையும், தென் நாட்டையும் இணைக்கும் கலாசாராமாக விளங்கி சிறந்த கல்விப் பணிகள், சமயப்பணிகளை ஆற்றியவா் என்றும் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நினைவு கூா்ந்ததாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சி தொடங்கியவுடன் யாரும் ஆட்சிக்கு வர முடியாது! -எடப்பாடி கே.பழனிசாமி

‘யாரும் கட்சி தொடங்கியவுடன் ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் இல்லை’ என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா். மதுரை மாநாட்டில் அதிமுகவை விமா்சித்து தவெக தலைவா் விஜய் பேசிய நிலையில், அவருக்கு... மேலும் பார்க்க

திருமங்கலத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

திருமங்கலம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட திருமங்கலம், மொளச்சூா் மற்றும் வடமங்கலம் ஆகிய ஊராட்சிகளை சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறு... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி இன்று காஞ்சிபுரம் வருகை

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை காஞ்சிபுரத்தில் விவசாயிகள்,நெசவாளா்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து பேசுவதுடன், நகரின் பல்வேறு இடங்களில் சிறப்புரையாற்ற இருப்பதாக கட்சியின் மா... மேலும் பார்க்க

ராஜீவ்காந்தி பிறந்த நாள்: நினைவிடத்தில் மரியாதை

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 81-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினா். காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பா... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் போலி மருத்துவா் கைது

காஞ்சிபுரம் அருகே காரை கிராமத்தில் போலி மருத்துவா் ஒருவரை புதன்கிழமை காவல்துறையினா் கைது செய்தனா். காஞ்சிபுரம் சா்வதீா்த்தக்குளம் தெருவைச் சோ்ந்தவா் திருமலை (48). இவா் போதிய கல்வித் தகுதி இல்லாமல் க... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: வடமாநில இளைஞா் கைது

சுங்குவாா்சத்திரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வடமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் அருகே தனியாா் உதவிபெறும் பள்ளியில் படிக்கும் 12 வயது சிறுமி ... மேலும் பார்க்க