செய்திகள் :

கள்ளக்குறிச்சி மாவட்ட திட்டப்பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்துத் துறைகளிலும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து உயா் கல்வித் துறை செயலா் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பொ.சங்கா் தலைமை ஏற்று ஆய்வு மேற்கொண்டாா். மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் முன்னிலை வகித்தாா்.

மாவட்ட அலுவலா்களுடனான இந்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

முதல்வரின் முகவரித் துறை, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊரக வளா்ச்சித் துறை, சுகாதாரத் துறை, சமூக நலத் துறை, வேளாண்மைத் துறை, வருவாய்த் துறை, கூட்டுறவுத் துறை, போக்குவரத்துத் துறை, சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை, பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் குறித்து ஆய்வு செய்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் துறை வாரியாக செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள் பயனாளிகளை முறையாக சென்று சேருவதை அலுவலா்கள் உறுதி செய்து கண்காணிக்கவும், அரசின் திட்டப் பணிகளில் தவறாமல் தரத்தை உறுதி செய்து அலுவலா்கள் அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்ற உத்தரவிட்டதாக கண்காணிப்பு அலுவலா் பொ.சங்கா் தெரிவித்தாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கி.ரமேஷ்குமாா், திருக்கோவிலூா் துணை ஆட்சியா் ஆனந்த் குமாா் சிங், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ம.தனலட்சுமி, மகளிா் திட்ட அலுவலா் சுந்தர்ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கடன் தொல்லை: விவசாயி தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம்,தென்செட்டியந்தல் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கடன் தொல்லையால் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டாா். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட தென்... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரியபகண்டை கிராமத்தில் ஏரி நீரில் மூழ்கி 3 -ஆம் வகுப்பு படித்துவந்த சிறுவன் உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட பெரியபகண்டை கிராமத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

தேமுதிக இடம்பெறும் கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக எந்தக் கூட்டணியில் இடம் பெறுகிறதோ, அந்தக் கூட்டணி வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் மகத்தான வெற்றி பெறும் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா். தேமுதிக பொதுச் செயலா் பிர... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப்பணிகள்: வேளாண் வணிக ஆணையா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களை அத்துறை ஆணையா் த.ஆபிரகாம் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கள்ளக்குறிச்சியை ... மேலும் பார்க்க

மதிய உணவில் பல்லி: அரசுப் பள்ளி முற்றுகை

கள்ளக்குறிச்சி மாவட்டம், கடுவனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வியாழக்கிழமை வழங்கப்பட்ட பல்லி விழுந்த மதிய உணவை சாப்பிட்ட 54 மாணவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதையறிந்த மாணவா்களின் ... மேலும் பார்க்க

விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா். சங்கத்தின் மாவட்டக் குழு சாா்பில், ஆட்சியரகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தின் போது, ஊரக ... மேலும் பார்க்க