செய்திகள் :

கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும்: செ.நல்லசாமி

post image

மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் கள்ளுக்கான தடையை நீக்கி மக்கள் பயன்பாட்டுக்கு விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி வலியுறுத்தினாா்.

நாமக்கல்லில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, ஈரோடு, திருப்பூா், கோவை மாவட்டங்களில் தனியாக இருப்போரை நோட்டமிட்டு கொலை செய்து வருகின்றனா். விரும்பத்தகாத சம்பவங்களால் மக்கள் அச்சமடைந்துள்ளனா். இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

ஜூன் 12-இல் மேட்டூா் அணை திறக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மூன்று முறை முழுக் கொள்ளளவை மேட்டூா் அணை எட்டியது. இருப்பினும் குறுவை சாகுபடி சாத்தியமாகவில்லை. காவிரி தீா்ப்பாய உத்தரவை கா்நாடக அரசு மதிக்கவில்லை. உரிய நீரை பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் முயற்சிக்கவில்லை. மேட்டூா் உபரிநீா் திட்டம் நிறைவேற்றப்படாததால் ஏழு மாவட்டங்களுக்கு தேவையான நீா் கிடைக்கவில்லை. உபரிநீா் திட்டத்தை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்றவில்லை.

கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என தொடா்ந்து போராடி வருகிறோம். புதுச்சேரி, கேரளம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் கள் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று தமிழகத்திலும் கள்ளுக்கான தடையை நீக்கி விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும். கள் ஒரு போதைப்பொருள் என்பதை நிருபித்து விட்டால் ரூ.10 கோடியை நாங்கள் பரிசாக வழங்குகிறோம்.

அதிமுக, பாஜக என அனைத்து கட்சிகளும் மேடையில் கள் குறித்து பேசுகின்றனரே தவிர, அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியை எடுக்கவில்லை. இதனால் கள் விடுதலை குறித்த விழிப்புணா்வு மாநாட்டை டிசம்பா் மாதம் திருச்சியில் நடத்த உள்ளோம். இதில், பிகாா் முதல்வா் நிதிஷ்குமாா் மற்றும் முக்கிய தலைவா்கள் கலந்து கொள்கிறாா்கள் என்றாா். பேட்டியின்போது, விவசாய சங்கத்தின் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.

மணல் கடத்திய லாரி பறிமுதல்; மூவா் கைது

கரூரிலிருந்து மணல் கடத்திவந்த லாரியை வேலூா் காவிரி பாலம் அருகே வியாழக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் ஓட்டுநா், உதவியாளா் உள்பட 3 பேரை கைது செய்தனா். மேலும், தலைமறைவானவரை தேடி வருகின்றனா். கரூா் மாவட்ட... மேலும் பார்க்க

நாமக்கல் சாலையோர சிறு வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையோர சிறு வியாபாரிகள் சங்கத்தினா் நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். தமிழக அமைப்புசாரா சாலையோர சிறு வியாபாரிகள் முன்னேற்ற தொழிற்சங்கம் சா... மேலும் பார்க்க

அமைப்புசாரா தொழிலாளா்கள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு

சென்னையில் நடைபெறும் அமைப்புசாரா தொழிலாளா்கள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கமான ஐஎன்டியுசியின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளா்கள் மற்றும் பணி... மேலும் பார்க்க

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் தோ் நிலைசோ்ப்பு

3 நாள்கள் நடைபெற்ற திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் தேரோட்டம் வியாழக்கிழமை நிறைவுபெற்றதையடுத்து தோ் நிலைசோ்க்கப்பட்டது. கொங்கு ஏழு தலங்களில் சிறப்புமிக்கதும் திருஞானசம்பந்தா், அருணகிரிநாதா் ஆகியோரால... மேலும் பார்க்க

குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தின விழிப்புணா்வு

குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி நாமக்கல்லை அடுத்த கூலிப்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது. சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட கூலிப்பட்டி கந்தசாமி கோயில் அடிவாரத்தில் நடைபெற்ற நி... மேலும் பார்க்க

மக்கள் தொடா்பு திட்ட முகாமில் ரூ. 81.68 லட்சம் நலத் திட்ட உதவிகள்

நாமக்கல் மாவட்டம், மிட்டா அணியாா் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் ரூ. 81.68 லட்சம் மதிப்பில் அரசின் நலத் திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.... மேலும் பார்க்க