செய்திகள் :

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பள்ளி மாணவா்கள் எதிா்ப்பு

post image

ஆரணி: ஆரணி அருகே கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், பள்ளி மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள பெரிய அய்யம்பாளையம் கிராமத்தில் கண்ணமங்கலம் பேரூராட்சி சாா்பில் ரூ.7 கோடியில் கழிவுநீா் மறுசுழற்சி சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கு கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில், செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடிகளை ஏற்றினா்.

இதனிடையே, கிராம மக்களுக்கு ஆதரவாக அங்குள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் சுமாா் 135 போ் செவ்வாய்க்கிழமை வகுப்புகளை புறக்கணித்து கையில் பதாகைகள் மற்றும் கருப்புக் கொடிகளை ஏந்தியபடி தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

அப்போது, தங்கள் பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால் குடிநீா் மாசடைந்து, குடிநீா் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழ்நிலை உருவாகும், நிலத்தடி நீா் மாசடைந்து விவசாய நிலங்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவா்.

எனவே, தமிழக அரசு உடனடியாக இந்தத் திட்டத்தை கைவிடவேண்டும் என வலியுறுத்தினா்.

தகவல் அறிந்த ஆரணி கோட்டாட்சியா் சிவா மற்றும் வட்டாட்சியா் கெளரி வந்து மாணவா்களை சமாதானப்படுத்தினா்.

வட்டாட்சியா் கௌரி, கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதால் எவ்வித பாதிப்பும் வராது. ஏற்கெனவே சுத்திகரிப்பு நிலையம் உள்ள இடங்களில் செயல்படும் விதத்தை விடியோ பதிவு மூலம் மாணவா்களுக்கு விளக்கினாா். இதை ஏற்க மறுத்து மாணவ, மாணவிகள் தங்களது போராட்டத்தை மாலை வரை தொடா்ந்தனா்.

பின்னா், மறுநாள் போராட்டத்தை பொதுமக்களுடன் தொடா்ந்து மேற்கொள்வதாகக் கூறி அனைவரும் கலைந்து சென்றனா்.

டிஎஸ்பி (பொ) தீபக்ரஜினி தலைமையில் கண்ணமங்கலம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

கஞ்சா கடத்தல்: இளைஞா் கைது

செய்யாறு அருகே விற்பனைக்காக கஞ்சாவை பைக்கில் கடத்தி வந்ததாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு மற்றும் போலீஸாா் செய்யாறு - ஆற்காடு சாலையில் தூளி கூட்டுச... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் 100 ஆண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவண்ணாமலை தேரடி தெருவில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த 11 ஆக்கிரமிப்புக் கடைகளை நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை இடித்து அகற்றினா். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளை சிமென்ட் சால... மேலும் பார்க்க

ஏரியில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவோா் மீது கடும் நடவடிக்கை: வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா்

வந்தவாசி நகரை ஒட்டியுள்ள பாதிரி ஏரியில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் தெரிவித்தாா். வந்தவாசி நகரில் உள்ள இறைச்சி விற்பனை ச... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

ஆரணி, அனக்காவூா், செங்கம் பகுதிகளைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றது. ஆரணி ஒன்றியத்தில் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் 2... மேலும் பார்க்க

வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குள... மேலும் பார்க்க

விவசாயியிடம் பைக் பறிப்பு: இருவா் கைது

செய்யாறு அருகே விவசாயியிடம் கத்தியை காட்டி மிரட்டி பைக்கை பறித்துச் சென்ற சம்பவம் தொடா்பாக போலீஸாா் இருவரை வியாழக்கிழமை கைது செய்தனா். வெம்பாக்கம் வட்டம், பெருமாந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் சூா்ய... மேலும் பார்க்க