செய்திகள் :

கவரப்பேட்டை: ``தண்டவாளத்தில் நட்டு, போல்ட்டுகளை கழற்றியதே ரயில் விபத்துக்கு காரணம்'' - ரயில்வே

post image

2024-ம் ஆண்டு, அக்டோபர் மாதம், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்து உள்ள கவரப்பேட்டை பகுதியில் சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

அந்த எக்ஸ்பிரஸ் ரயில் மைசூரில் இருந்து சென்னை வழியாக பீகார் மாநிலம், தர்பங்காவுக்கு செல்லும் ‘பாக்மதி எஸ்பிரஸ்’ ரயில் ஆகும்.

அக்டோபர் 11-ம் தேதி நடந்த இந்த விபத்தில், பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் 13 பெட்டிகள் தடம் புரண்டன... ஒரு பெட்டி தீப்பிடித்து எரிந்தது.

இந்த சம்பவத்தில் 20 காயமடைந்தனர். ஆனால், உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

Train Accident | கவரப்பேட்டை ரயில் விபத்து
Train Accident | கவரப்பேட்டை ரயில் விபத்து

'நாசவேலை' காரணமாக

இந்த விபத்து குறித்து அறிக்கை வெளியாகி உள்ளது. அது குறித்து தெற்கு மண்டல ரயில்வேயின் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சவுத்ரி விசாரணைத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

அவர், "இந்த விபத்து திடீர் அல்லது தானியங்கி தோல்வியால் எதுவும் ஏற்படவில்லை.

தண்டவாளத்தில் உள்ள நட்டுகள் மற்றும் போல்ட்டுகளை யாரோ வேண்டுமென்றே கழற்றி இருக்கிறார்கள். இந்த நாசவேலை தான் விபத்திற்கு காரணம். அதனால், இந்த விபத்து 'நாசவேலை'க்கு கீழ் வகையறப்படுத்தப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், அந்த ரயிலின் ஓட்டுநர் ஜி.சுப்ரமணியின் விழிப்புணர்வு மற்றும் சமயோசிதத்தையும் பாராட்டியுள்ளார்.

விருதுநகர்: பேருந்திலிருந்து சாலையில் விழுந்த ஒரு வயதுக் குழந்தை; அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி

ஸ்ரீவில்லிபுத்தூர்நோக்கி...விருதுநகர் மாவட்டம்ஸ்ரீவில்லிபுத்தூர்அருகேமுத்துலிங்காபுரம்கிராமத்தைச் சேர்ந்தவர்மதன்குமார். இவர் தனது சகோதரி மற்றும் சகோதரியின் இரண்டரை வயது மற்றும் 1 வயது கைக்குழந்தைகளை அ... மேலும் பார்க்க

`உயிர் பலி வாங்கும் தொப்பூர் கணவாய்' - விபத்தை தவிர்க்க மேம்பால பணி ஆரம்பம் | Photo Album

தொப்பூர் கணவாய் மேம்பாலப்பணி ஆரம்பம்தொப்பூர் கணவாய் மேம்பாலப்பணி ஆரம்பம்விபத்தை குறைக்க மேம்பாலப்பணி ஆரம்பம் Thoppur kanavaiவிபத்தை குறைக்க மேம்பாலப்பணி ஆரம்பம் Thoppur kanavaiவிபத்தை குறைக்க மேம்பாலப... மேலும் பார்க்க

வயநாடு: கல்லறையில் டாய்ஸ், தின்பண்டங்கள் - கண்கலங்க வைத்த முதலாமாண்டு நினைவேந்தல் காட்சிகள்

கேரள வரலாற்றில் கருப்பு நாளாகக் கருதப்படும் வயநாடு நிலச்சரிவு ஏற்பட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்திருக்கிறது. ஜூலை 30 - ம் தேதியான நேற்று, முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வுக்கு கேரள அரசு ஏற்பாடு செய்தி... மேலும் பார்க்க

சதுரகிரி மலையில் வேகமாய் பரவும் காட்டுத்தீ; பக்தர்கள் செல்ல தடை; தீயை அணைக்கப் போராடும் வனத்துறை

விருதுநகர் மாவட்டஸ்ரீவில்லிபுத்தூர்அருகே வத்திராயிருப்பு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரிசுந்தர மகாலிங்கம்கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது... மேலும் பார்க்க

ராமேஸ்வரம்: சரக்கு வாகனம் - ஆட்டோ மோதல்; விபத்தில் ஓட்டுநர்கள் இருவர் உயிரிழந்த சோகம்..

ராமேஸ்வரம் ஏர்காடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது நண்பர்கள் மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த மாதேஸ்வரன் மற்றும் அகஸ்தியன். ஆட்டோ ஓட்டுநர்களான இவர்கள் மூவரும் மாதேஸ்வரனுக்கு சொந்தமான ஆட்டோவிற்கு தரச்சா... மேலும் பார்க்க

மார்த்தாண்டம்: பைக் விபத்தில் 2 மாணவர்கள் பலி, போராட்டம்.. யார் காரணம்? - போலீஸார் சொல்வது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பம்மம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு பஸ் மற்றும் பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தேங்காய்பட்டிணம் பகுதியைச் சேர்ந்த அஜ்மல், அப்சல் ஆகிய இரண்டு... மேலும் பார்க்க