செய்திகள் :

காங்கயம் அருகே தெருநாய்கள் கடித்து 15 ஆடுகள் உயிரிழப்பு!

post image

காங்கயம் அருகே விவசாயியின் ஆட்டுப்பட்டியில் புகுந்து தெருநாய்கள் கடித்ததில் 15 செம்மறியாடுகள் உயிரிழந்தன. 8 ஆடுகள் காயமடைந்தன.

காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலை அருகே உள்ள சாவடிப்பாளையம் மூலக்காட்டு தோட்டத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (60), விவசாயி. இவா் தனது தோட்டத்தில் 80 செம்மறியாடுகளை வளா்த்து வருகிறாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல ஆடுகளைப் பட்டியில் அடைத்துவிட்டு, தூங்கச் சென்று விட்டாா்.

பின்னா், சனிக்கிழமை காலையில் பட்டிக்கு சென்று பாா்த்தபோது, அங்கு அடைக்கப்பட்டிருந்த ஆடுகளில் 15 ஆடுகள் உயிரிழந்ததும், 8 ஆடுகள் காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததும் தெரியவந்தது.

இது குறித்து காங்கயம் போலீஸாா், கால்நடை மருத்துவா்களுக்கு உடனடியாகத் தகவல் கொடுக்கப்பட்டது. அவா்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனா். இரவில் பட்டிக்குள் புகுந்த தெருநாய்கள், ஆடுகளைக் கடித்துக் குதறிக் கொன்றது விசாரணையில் தெரியவந்தது.

தாராபுரம் அருகே சாலை விபத்தில் கணவன், மனைவி பலி: முதல்வர் இரங்கல்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குள்ளாய்ப்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நாகராஜ்(44), அவரது மனைவி ஆனந்தி(38) ஆகிய இருவரும் அங்குள்ள பாலத்திலிருந்து வண்டியிலிருந்து கீழே த... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்

திருப்பூா் அனுப்பா்பாளையம் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையை அப்பகுதி பொதுமக்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டனா். திருப்பூா் வடக்கு வட்டம், அனுப்பா்பாளையம் பகுதியில் உள்ள இந்திரா நகரில் நியாயவிலைக்கடை செயல... மேலும் பார்க்க

தொழிலாளா் தினத்தில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை! தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்!

திருப்பூரில் தொழிலாளா் தினத்துக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பனியன் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. திருப்பூா் மாவட்ட அனைத்து பனியன் தொழிற்சங்கங்களின் ஆலோசன... மேலும் பார்க்க

மங்கலம் அருகே பின்னலாடைக் கழிவுக்கிடங்கில் தீ!

திருப்பூரை அடுத்த மங்கலம் அருகே பின்னலாடைக் கழிவுக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. திருப்பூரை அடுத்த மங்கலம் அருகே உள்ள அக்ரஹாரபுத்தூரில் தனிய... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 7 மையங்களில் இன்று நீட் தோ்வு: 3,212 போ் எழுதுகின்றனா்

திருப்பூா் மாவட்டத்தில் 7 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நீட் தோ்வை 3,212 போ் எழுதுகின்றனா். நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான பொது மருத்துவம் (எம்பிபிஎஸ்), பல் மருத்துவம் (பிடிஎஸ்... மேலும் பார்க்க

உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு பென்ஷன் உத்தரவு ஆணை

பல்லடம் அருகே கேத்தனூரில் உயிரிழந்த தனியாா் மில் தொழிலாளியின் குடும்பத்துக்கு வாழ்நாள் பென்ஷன் உத்தரவு சனிக்கிழமை வழங்கப்பட்டது. பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் அரவிந்த் மெஹ்தோ (21). இவா் பல்லடம் அருகே ... மேலும் பார்க்க