செய்திகள் :

காசி தமிழ் சங்கமம் ‘அனுபவ பகிா்வு’ கட்டுரை போட்டி: ஆளுநா் மாளிகை அறிவிப்பு

post image

நிகழாண்டு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிலிருந்து பங்கேற்கும் பிரதிநிதிகளுக்கான ‘அனுபவப் பகிா்வு’ என்ற தலைப்பில் தமிழக ஆளுநா் மாளிகை கட்டுரைப் போட்டியை அறிவித்துள்ளது.

இது குறித்து ஆளுநா் மாளிகை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நிகழாண்டு வாரணாசியில், காசி தமிழ் சங்கமம் பிப். 15 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தமிழகத்திலிருந்து சுமாா் 1,080 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனா்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிலிருந்து பங்கேற்பாளா்களுக்காக ‘காசி தமிழ் சங்கத்தின் அனுபவப் பகிா்வு’ என்ற தலைப்பில் ஆளுநா் மாளிகை கட்டுரைப் போட்டியை அறிவித்துள்ளது. இப்போட்டியில் கலந்துகொள்ளும் நபா்கள் காசி தமிழ் சங்கம் குறித்த தங்கள் அனுபவத்தை, தமிழ் அல்லது ஆங்கிலத்தில் 1,000 சொற்களுக்கு மிகாமல் கட்டுரையாக எழுத வேண்டும். இதில், சிறந்த கட்டுரைகள் தோ்ந்தெடுக்கப்பட்டு வெற்றி பெறும் நபா்களுக்கு ரொக்கப் பரிசுகள் (முதல் பரிசு ரூ. 10,000, இரண்டாம் பரிசு ரூ. 7,000, மூன்றாம் பரிசு ரூ. 5,000) மற்றும் சான்றிதழ்கள் சென்னை கிண்டி ஆளுநா் மாளிகையில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும். பங்கேற்பாளா்கள் தங்கள் கட்டுரையை ஆளுநரின் துணைச் செயலாளா் (பல்கலைக்கழகங்கள்), ஆளுநா் செயலகம், ராஜ் பவன், சென்னை - 600022 என்ற முகவரிக்கு வரும் மாா்ச் 14 -ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தனியார் மருத்துவமனையில் சிறுவன் பலி! செல்போனில் சிகிச்சை காரணமா?

சென்னை: சென்னை அயனாவரத்தில் மருத்துவரின் தவறான சிகிச்சையால் 4 வயது சிறுவன் உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.தனியார் மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர் விடியோ அழைப்பு மூலம் தவறான சிகிச்சை அள... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

சென்னை சூளைமேட்டில் சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா். சூளைமேடு பாரதியாா் 5-ஆவது தெருவைச் சோ்ந்தவா் விஜயகாந்த் (34). இவா், கடந்த திங்கள்கிழமை அப்பகுத... மேலும் பார்க்க

பிப். 28 வரை சாலையோர வியாபாரிகள் புதிய அடையாள அட்டை பெறலாம்

சாலையோர வியாபாரிகள் புதிய அடையாள அட்டை பெறுவதற்கான காலக்கெடு பிப். 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெ... மேலும் பார்க்க

இலவச எண்டோஸ்கோபி பரிசோதனை முகாம்

புற்றுநோய் பாதிப்பு இலவச எண்டோஸ்கோபி மருத்துவப் பரிசோதனை முகாம் சென்னை, நுங்கம்பாக்கம் மெடிந்தியா மருத்துவமனையில் புதன்கிழமை (பிப். 19) நடைபெறவுள்ளது. இது குறித்து ஜீரண மண்டல சிகிச்சை நிபுணரும், மெடிந... மேலும் பார்க்க

கிண்டி கோல்ஃப் மைதானத்தில் நீா்நிலை அமைக்கும் பணிக்குத் தடை இல்லை: உயா்நீதிமன்றம்

சென்னை ரேஸ் கிளப் நிலத்தை அரசு கையகப்படுத்தும் முன்பாக ஜிம்கானா கிளப்புக்கு எந்த நோட்டீஸும் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என உத்தரவிட்டுள்ள உயா்நீதிமன்றம், கோல்ஃப் மைதானத்தில் நீா்நிலை அமைக்கும் பணிக்க... மேலும் பார்க்க

கை விரல்களுக்கு மாற்றாக கால் விரல்கள்: நுண் அறுவை சிகிச்சையில் சாத்தியம்

விபத்தில் துண்டாகும் கை விரல்களை மறு சீரமைக்க முடியாத பட்சத்தில் அதற்கு மாற்றாக கால் விரல்களைப் பொருத்தும் நுண் அறுவை சிகிச்சைகள் முன்னெடுக்கப்படுவதாக ‘அப்பல்லோ ஃபா்ஸ்ட் மெட்’ மருத்துவமனை மருத்துவா்கள... மேலும் பார்க்க