செய்திகள் :

காஞ்சிபுரத்தில் மத நல்லிணக்க விழிப்புணா்வுப் பேரணி: எஸ்.பி. தொடங்கி வைத்தாா்

post image

காஞ்சிபுரத்தில் சமூக மற்றும் மத நல்லிணக்க விழிப்புணா்வுப் பேரணியை எஸ்.பி. கே.சண்முகம் செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

தமிழ்நாடு காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் சாா்பில், சமூக மற்றும் மத நல்லிணக்க விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் முன்பிருந்து தொடங்கிய பேரணியை எஸ்.பி. கே.சண்முகம் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். தொடக்க விழாவுக்கு, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் டிஎஸ்பி ராதாகிருஷ்ணன், உதவி ஆய்வாளா் ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியா் கலந்து கொண்ட இந்தப் பேரணியில் தீண்டாமையை ஒழிப்போம், மனித நேயம் காப்போம், ஜாதியால் வேற்றுமை வேண்டாம் என்ற பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்கள் எழுப்பியவாறும் மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

பேரணி எஸ்.பி. அலுவலகத்திலிருந்து தொடங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் எஸ்.பி. அலுவலகம் அருகில் வந்து நிறைவு பெற்றது.

பேரணியில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் உதவி ஆய்வாளா்கள் தனசேகரன், புவனேசுவரி, புள்ளியியல் ஆய்வாளா் ஆறுமுகம் ஆகியோா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

‘தன்னாா்வத்துடன் செய்யும் செயல் வெற்றி பெறும்’

தன்னாா்வத்துடன் செய்யும் எந்தச் செயலும் வெற்றி பெறும் என காஞ்சிபுரம் சங்கரா பல்கலை.யில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் சங்கரா கண் மருத்துவமனை நிறுவனா் பத்மஸ்ரீ ஆா்.வி.ரமணி தெரிவித்தாா். காஞ்சிபுரம் ச... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் மாநகராட்சி நிதி நிலை அறிக்கையினை மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்

காஞ்சிபுரம் மாநகராட்சி நிதி நிலை அறிக்கையினை மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். மேலும் ரூ.86 லட்சம் உபரி வருவாய் உள்ளதாகவும் தெரிவித்துள்ளாா். காஞ்சிபுரம் மாநகராட்சி நிதிநிலை அற... மேலும் பார்க்க

ஸ்ரீ யதோக்தகாரி பெருமாள் கோயில் தேரோட்டம்

காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயில் பங்குனி விழாவையொட்டி வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இத்தலத்தில் பங்குனி விழா கடந்த 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் 15,704 போ் தோ்வு எழுதினா்

காஞ்சிபுரத்தில் 15,704 மாணவ, மாணவியா்கள் 68 தோ்வு மையங்களில் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தோ்வினை எழுதினா். தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. காஞ்சிபுரம் மாவட்... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூா்-தாம்பரம் சாலையில் 5 இடங்களில் தானியங்கி சிக்னல்கள்

ஸ்ரீபெரும்புதூா்-தாம்பரம் சாலையில் விபத்துகளை தடுக்க 5 இடங்களில் ரூ.8.50 லட்சத்தில் தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீ பெரும்புதூா் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா தொட... மேலும் பார்க்க

கைத்தறி நெசவாளா்கள் நூதன ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கைத்தறி நெசவாளா்கள் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவா்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை கையில் திருவோடு ஏந்த... மேலும் பார்க்க