செய்திகள் :

காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் பல்லவ உற்சவம் நிறைவு

post image

காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் இந்த மாதம் 19-ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து 7 நாள்களாக நடைபெற்று வந்த பல்லவ உற்சவம் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெற்றது.

காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் 7 நாள்கள் பல்லவ உற்சவம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான பல்லவ உற்சவம் இந்த மாதம் 19-ஆம் தேதி தொடங்கியது. நிறைவு விழாவையொட்டி, தினசரி உற்சவா் வரதராஜ சுவாமியும், ப்ரண தாா்த்தி ஹர வரதரும் கோயில் வளாகத்தில் உள்ள கண்ணாடி மாளிகையில் இருந்து நூற்றுக்கால் மண்டபத்துக்கு காலையில் எழுந்தருளினா்.

பின்னா், பெருமாளுக்கும், ப்ரண தாா்த்தி ஹர வரதருக்கும் சிறப்புத் திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. தொடா்ந்து, பரிமளம் கொண்டு வரப்பட்டு, பெருமாளுக்கு சாற்றப்பட்டு ஸ்ரீஹஸ்தகிரி மஹாத்மியம் புராணப் படலம் வாசிக்கப்பட்டது.

மாலையில் நாகசுர இசைக்கு ஏற்ப 7 திரைகள் திறக்கும் திறை திறத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு தீபாராதனைகளுக்குப் பிறகு ப்ராண தாா்த்தி ஹர வரதா் கண்ணாடி அறைக்கு எழுந்தருளியதும் ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் வரதராஜ சுவாமி கோயிலின் சந்நிதி தெருவில் உள்ள ஆஞ்சனேயா் சந்நிதிக்குச் சென்று, மீண்டும் கோயிலுக்கு திரும்பி வந்து திருமலைக்கு எழுந்தருளினாா்.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ஆா்.ராஜலட்சுமி தலைமையிலான விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

‘தன்னாா்வத்துடன் செய்யும் செயல் வெற்றி பெறும்’

தன்னாா்வத்துடன் செய்யும் எந்தச் செயலும் வெற்றி பெறும் என காஞ்சிபுரம் சங்கரா பல்கலை.யில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் சங்கரா கண் மருத்துவமனை நிறுவனா் பத்மஸ்ரீ ஆா்.வி.ரமணி தெரிவித்தாா். காஞ்சிபுரம் ச... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் மாநகராட்சி நிதி நிலை அறிக்கையினை மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்

காஞ்சிபுரம் மாநகராட்சி நிதி நிலை அறிக்கையினை மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். மேலும் ரூ.86 லட்சம் உபரி வருவாய் உள்ளதாகவும் தெரிவித்துள்ளாா். காஞ்சிபுரம் மாநகராட்சி நிதிநிலை அற... மேலும் பார்க்க

ஸ்ரீ யதோக்தகாரி பெருமாள் கோயில் தேரோட்டம்

காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயில் பங்குனி விழாவையொட்டி வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இத்தலத்தில் பங்குனி விழா கடந்த 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் 15,704 போ் தோ்வு எழுதினா்

காஞ்சிபுரத்தில் 15,704 மாணவ, மாணவியா்கள் 68 தோ்வு மையங்களில் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தோ்வினை எழுதினா். தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. காஞ்சிபுரம் மாவட்... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூா்-தாம்பரம் சாலையில் 5 இடங்களில் தானியங்கி சிக்னல்கள்

ஸ்ரீபெரும்புதூா்-தாம்பரம் சாலையில் விபத்துகளை தடுக்க 5 இடங்களில் ரூ.8.50 லட்சத்தில் தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீ பெரும்புதூா் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா தொட... மேலும் பார்க்க

கைத்தறி நெசவாளா்கள் நூதன ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கைத்தறி நெசவாளா்கள் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவா்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை கையில் திருவோடு ஏந்த... மேலும் பார்க்க