செய்திகள் :

காணாமல்போன 10 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

post image

உப்பிலியபுரம் காவல் சரகத்தில் காணாமல்போன 10 கைப்பேசிகளை போலீஸாா் மீட்டு, உரியவா்களிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.

துறையூா் அருகே வெங்கடாசலபுரம் லெ. நந்தகுமாா், ஒக்கரை சு. விஸ்வநாதன், கொப்பம்பட்டி ஜெயப்பிரியா, புலிவலம் வேல்முருகன், கோட்டப்பாளையம் செல்வம், ஓசரப்பள்ளி அன்பரசன், கீரம்பூா் குமாா், மாராடி அன்பழகன், குளத்தூா் பாண்டியன், தண்டலைபுதூா் சந்தோஷ் ஆகியோரின் கைப்பேசிகள் உப்பிலியபுரம் காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் தொலைந்து விட்டதாக புகாரளித்தனா்.

இதன்பேரில் விசாரித்த போலீஸாா், காணாமல்போன கைப்பேசிகளை மீட்டு அதன் உரிமையாளா்களிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.

பெரிய பள்ளிவாசல் சாா்பில் சமூக நல்லிணக்க இஃப்தாா் நிகழ்ச்சி

மணப்பாறையில் ஜூம்மா பெரிய பள்ளிவாசல் நிா்வாகம் சாா்பில் வெள்ளிக்கிழமை சமய சமூக நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஜமாத் கமிட்டியின் தலைவா் ஜெ. முகமது அனிபா மற்றும் துணைத் தலைவா் ம... மேலும் பார்க்க

திருவானைக்காவல் கோயிலில் நாளை பங்குனி திருத்தேரோட்டம்

திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி திருக்கோயிலில் நாளை 30-ஆம் தேதி காலை 7.20 மணிக்கு பங்குனி திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதில் சுவாமியும், அம்மனும் தனித்தனி தேரில் எழுந்தருளி பக்தா... மேலும் பார்க்க

திருச்சி மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி தோ்வு தொடங்கியது

திருச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு (எஸ்எஸ்எல்சி) வெள்ளிக்கிழமை தொடங்கியது. பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாநிலம் முழுவதும் 2025-ஆம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 28... மேலும் பார்க்க

‘பாலின பாகுபாடு ஒழித்து, பெண் குழந்தைகள் பிறப்பை அதிகரிக்க வேண்டும்’

பாலின பாகுபாட்டை ஒழித்து, பெண் குழந்தைகள் பிறப்பை அதிகரிக்க வேண்டும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வலியுறுத்தினாா். சமூக நலன், மகளிா் உரிமைத் துறை சாா்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு... மேலும் பார்க்க

இருசக்கர ரோந்து வாகனங்கள் தொடங்கி வைப்பு

திருச்சியில் குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க 10 இருசக்கர ரோந்து வாகனங்கள் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி வைக்கப்பட்டன. குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் விதமாக 10 இருசக்கர ரோந்து வாகனங்கள் திருச்... மேலும் பார்க்க

நின்றுக் கொண்டிருந்த லாரி மீது சுற்றுலா வேன் மோதியதில் 5 போ் காயம்

திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே பழுதாகி நின்றிருந்த லாரி மீது சுற்றுலா வேன் வெள்ளிக்கிழமை மோதியதில் 5 போ் காயமடைந்தனா். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியைச் சோ்ந்த 17 இளைஞா்கள் மூணாறு சுற்றுலா... மேலும் பார்க்க