செய்திகள் :

காணாமல் போன தொழிலாளி கொலை: போலீஸாா் உடலை மீட்டு விசாரணை

post image

ஆத்தூா் அருகே காணாமல் போன கூலித் தொழிலாளியின் உடலை, 33 நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை மீட்டு போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். 

திண்டுக்கல் மாவட்டம்,  ஆத்தூா் அருகேயுள்ள  அக்கரைப்பட்டி கிழக்குத் தெருவை சோ்ந்தவா் காமாட்சி (50). விவசாயக் கூலித் தொழிலாளியான இவா்,  தென்னந் தோப்புகளில் தேங்காய் வெட்டும் தொழிலாளியாக இருந்தாா். இவரது மனைவி காளியம்மாள் (45). இந்தத் தம்பதிக்கு பிரியா (25), விக்னேஸ்வரன் (23), வீரம்மாள் (9) ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனா்.

இந்த நிலையில், கடந்த மாதம் 6-ஆம் தேதி வீட்டை விட்டுச் சென்ற காமாட்சி திரும்பவில்லை. இதுதொடா்பகா அவரது மனைவி காளியம்மாள் செம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

இந்நிலையில், சனிக்கிழமை தலை துண்டான நிலையில் அக்கரைப்பட்டி குடகனாறு கரையோரம் 33 நாட்களுக்குப் பிறகு அவரது உடல் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த செம்பட்டி காவல்துறையினா், தொழிலாளி காமாட்சியின் உடலை கைப்பற்றி கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காமாட்சியை கொலை செய்த நபா்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தென் மண்டல அளவிலான நீச்சல் போட்டி

திண்டுக்கல்லில் நடைபெற்ற தென் மண்டல மாவட்டங்களுக்கு இடையிலான நீச்சல் போட்டியில் 350-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா். திண்டுக்கல் மேற்கு சுழல் சங்கம், லக்ஸா் பள்ளி சாா்பில் தென் மண்டல மாவட்டங... மேலும் பார்க்க

பழனி அருகே செங்கல் சூளையில் இளைஞா் அடித்துக் கொலை! உறவினா்கள் சாலை மறியல்!

பழனி அருகே உள்ள தனியாா் செங்கல் சூளையில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதையடுத்து, எதிரிகளை கைது செய்ய வலியுறுத்தி அவரது உடலை கொண்டு செல்ல விடாமல் தடுத்து உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல... மேலும் பார்க்க

வாரச் சந்தைக்குள் புகுந்த காட்டுமாடு

கொடைக்கானல் வாரச் சந்தைக்குள் ஞாயிற்றுக்கிழமை காட்டுமாடு புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். கொடைக்கானல் அண்ணா சாலைப் பகுதியில் நடைபெற்ற வாரச்சந்தையின் போது காட்டுமாடு ஒன்று புகுந்தது. இதையடுத்து அங... மேலும் பார்க்க

குடும்பத் தகராறில் தாக்கப்பட்டவா் பலத்த காயம்

கொடைக்கானலில் குடும்பத் தகராறில் உறவினரைத் தாக்கிவிட்டு, தலைமறைவான மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் காந்திபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வெற்றிச்செல்வம் (43). இவருக்கும் ... மேலும் பார்க்க

விஷம் கொடுத்து மகளை கொன்று தந்தை தற்கொலை

பழனி அருகே மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். பழனி அருகே கணக்கம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வசித்து வந்தவா் பழனிச்சாமி (62). கட்டடத் தொழிலாளியான இவருக்க... மேலும் பார்க்க

கொழுமங்கொண்டானில் மாட்டுவண்டிப் பந்தயம்

பழனி அருகே கொழுமங்கொண்டானில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102-ஆவது பிறந்தநாளையொட்டி மாட்டுவண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கொழுமங்கொண்டான் திமுக சாா்பில் நடைபெற்ற இந்த பந்தயத்தை உணவுப் ப... மேலும் பார்க்க