செய்திகள் :

காதலனுடன் சேர திட்டம்; திருமணமான இரண்டு வாரங்களில் கணவனை ஆள்வைத்து கொன்ற மனைவி! - சிக்கியது எப்படி?

post image

உத்தரப்பிரதேச மாநிலம், அவுரையா என்ற இடத்தை சேர்ந்த திலிப் என்பவர் பிரகதி (22) என்ற பெண்ணை கடந்த 5ம் தேதிதான் திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஒரு மாதத்திற்குள் அதாவது கடந்த 19ம் தேதி திலிப் அங்குள்ள ஒரு இடத்தில் துப்பாக்கி காயத்துடன் கிடந்தார்.

அவரை உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். இரண்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகும் நிலைமை மோசம் அடைந்ததால், அங்கிருந்து மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து அவுரையாவிற்கு மீண்டும் கொண்டு வரப்பட்டார். ஆனால் அவ்வளவு முயற்சி செய்தும் அவர் இறந்து போனார். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து திலிப்பை அடித்து உதைத்து துப்பாக்கியால் சுட்ட 3 பேர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் விசாரித்தபோது இக்கொலையில் திலிப் மனைவிக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. திலிப் மனைவி பிரகதியை பிடித்து விசாரித்தபோது, பிரகதி திருமணத்திற்கு முன்பு நான்கு ஆண்டுகள் அனுராக் என்பவரை காதலித்து வந்துள்ளார். அவர்களது காதலுக்கு பிரகதியின் பெற்றோர் சம்மதிக்காமல் அவரை திலிப்பிற்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் சந்தித்து பேசிக்கொள்ள முடியவில்லை. இதையடுத்து பிரகதியும், அனுராக்கும் சேர்ந்து திலிப்பை கொலை செய்ய முடிவு செய்து ராம்ஜி என்ற கூலியாளை இதற்காக நியமித்தனர். இக்கொலைக்காக ரூ.2 லட்சம் பணம் கொடுத்துள்ளனர். ராம்ஜி தனது அடியாட்களுடன் திலிப்பை பைக்கில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று அடித்தும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்துள்ளார் என்று போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக பிரகதி மற்றும் அவரது காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீட்டில் ஸ்டூடியோ; மாடல்களுக்கு லட்சத்தில் சம்பளம்; ஆபாச வீடியோ நெட்வொர்க்கை இயக்கிய நொய்டா தம்பதி!

உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவில் சட்டவிரோதமாக ஆன்லைனில் ஆபாச வீடியோ வெளியிடப்படுவதாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நொய்டாவில் உள்ள உஜ்வால் என்பவரத... மேலும் பார்க்க

உசிலம்பட்டி போலீஸ் கொலை வழக்கு: கேரளா தப்ப முயன்ற ரௌடி சுட்டுப் பிடித்த போலீஸார் - நடந்தது என்ன?

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் தலைமைக் காவலர் முத்துக்குமார் (40). இவர் கடந்த 2009-ல் காவல்துறையில் பணிக்கு சேர்ந்து, தற்போது உசிலம்பட்டி காவல் ஆய்வாளருக்கு டிரைவராக பணிய... மேலும் பார்க்க

பிரபல ரௌடி அசோக்கைத் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸ்.. செங்கல்பட்டு வனப்பகுதியில் நடந்ததென்ன?

செங்கல்பட்டு அருகே உள்ள திருப்போரூர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் (30). இவர் ஏ பிளஸ் ரௌடி. சிறையிலிருந்து வெளியில் வந்த அசோக்கை போலீஸார் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அசோக் தலைமையிலான ரௌடி டீம், தி.மு... மேலும் பார்க்க

சென்னை: மருத்துவ மாணவிக்குப் பாலியல் தொல்லை - மாணவனைத் தேடும் போலீஸ்!

சென்னையில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் எம்.டி.எஸ் 2-ம் ஆண்டு படித்து வருகிறார் 26 வயது மாணவி ஒருவர். இவர் கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், அதே கல்லூரியில் படி... மேலும் பார்க்க

திண்டுக்கல்: நிலத்தகராறில் 3 பேர் கொலையா? கிணற்றில் உடல்களைத் தேடிய போலீஸார்; நடந்தது என்ன?

திண்டுக்கல் அருகே அணைப்பட்டியில் இருதரப்புக்கும் இடையில் நிலப்பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது.இதில் 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களின் உடல்கள் அணைப்பட்டியில் உள்ள ஒரு கிணற்றில் வீச... மேலும் பார்க்க

சைபர் கிரிமினல்களிடம் ரூ.50 லட்சத்தை இழந்த வயதான தம்பதி தற்கொலை

இணையத்தளக் குற்றவாளிகள் பெண்கள் மற்றும் முதியவர்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து அவர்களிடம் இருக்கும் பணத்தைப் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடக்கின்றன. அதிகமானோர் கோடிக்கணக்கில் பணத்தை இழந்துள்ள... மேலும் பார்க்க