முதல் சுற்றிலேயே தோல்வி: விரக்தியால் டென்னிஸ் ராக்கெட்டை உடைத்த மெத்வதேவ்!
காதலனை நள்ளிரவில் கணவன் வீட்டிற்கு அழைத்த இளம்பெண்; தந்தை செய்த பயங்கரம்- மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
மகாராஷ்டிரா மாநிலம், நாண்டெட் மாவட்டத்தில் உள்ள போர்ஜுனி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவானி. இவருக்கு கடந்த ஆண்டு அருகில் உள்ள கோலேகாவ் என்ற கிராமத்தை சேர்ந்த சுதாகர் என்பவருடன் திருமணமானது. திருமணத்திற்கு முன்பே லகான் பண்டாரே என்பவரை சஞ்சீவானி காதலித்து வந்தார். திருமணத்திற்கு பிறகு சஞ்சீவானி தொடர்ந்து தனது காதலனுடன் தொடர்பில் இருந்தார். திடீரென தனது காதலனை இரவில் தனது வீட்டிற்கு வரும்படி சஞ்சீவானி அழைப்பு விடுத்தார். உடனே காதலன் பண்டாரேயும் காதலியின் வீட்டிற்கு நள்ளிரவு சென்றார்.
அவர்கள் நள்ளிரவில் வீட்டிற்குள் இருந்தபோது கணவர் வீட்டார் அவர்களை பிடித்துக்கொண்டனர். உடனே அவர்கள் இரண்டு பேரையும் பிடித்து வைத்துக்கொண்டு சஞ்சீவானியின் தந்தைக்கு தகவல் கொடுத்து அவரை கணவன் வீட்டார் வரச்சொன்னார்கள்.

சஞ்சீவானியின் தந்தை தனது உறவினர்கள் இரண்டு பேரையும் தன்னுடன் அழைத்து வந்தார். அவர் வந்தவுடன் அவர்கள் தனது மகளையும், அவரது காதலனையும் அடித்து உதைத்தனர். பின்னர் இரண்டு பேரையும் கை, கால்களை கட்டி ஊருக்கு வெளியில் இருந்த ஆழமான கிணற்றில் தூக்கிப்போட்டுவிட்டனர்.
இது குறித்து மறுநாள் கிராம மக்கள் மூலம் போலீஸாருக்கு தெரிய வந்தது. போலீஸ் உயர் அதிகாரிகள் அங்கு வந்து கிணற்றில் வீசப்பட்ட இரண்டு பேரது சடலங்களையும் தேடினர். நீண்ட தேடுதலுக்குப் பிறகு சஞ்சீவானியின் உடல் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் பண்டாரேயின் உடல் கிடைக்கவில்லை. பல மணி நேரம் தேடிய பிறகு உடலை மீட்டனர். மகளையும், அவரது காதலனையும் கொலை செய்தது தொடர்பாக சஞ்சீவானியின் தந்தை, சஞ்சீவானியின் கணவர் மற்றும் உறவினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.