செய்திகள் :

காதலை மறுத்தப் பெண்ணை பிணைக் கைதியாகப் பிடித்த இளைஞர்! தீரத்துடன் மீட்டவருக்கு குவியும் பாராட்டு!!

post image

மகாராஷ்டிர மாநிலம் சதாரா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தன்னுடைய காதலை ஏற்க மறுத்த பள்ளி மாணவியின் கழுத்தில் கத்தியைவைத்து மிரட்டிய நிலையில், தீரத்துடன் பெண்ணை மீட்டவருக்கு பாராட்டுகள் குவிகிறது.

இளம் வயது பிள்ளைகளை வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலான இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

அந்தப் பெண் 10ஆம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கிறார் என்றும், பள்ளி முடிந்து திரும்பும்போது நாள்தோறும் அந்த இளைஞர் வந்து பெண்ணை தொல்லை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

அதுபோல, அன்றைய தினமும், இளைஞர் தன்னுடைய காதலைச் சொல்ல, அப்பெண் அதனை ஏற்க மறுத்ததால், தன்னுடைய பாக்கெட்டிலிருந்து கத்தியை எடுத்து பெண்ணின் கழுத்தில் வைத்து கொன்றுவிடுவதாக மிரட்டியிருக்கிறார்.

அங்கிருந்த பலரும், அப்பெண்ணை எதுவும் செய்துவிட வேண்டாம் என்று கெஞ்சியிருக்கிறார்கள். யார் சொல்வதையும் அவர் கேட்காத நிலையில், ஒருவர், பின்னால் இருந்த சுவர் மீது ஏறி குதித்து வந்த இளைஞரை லாவகமாகப் பிடித்து, அவரது கையிலிருந்து கத்தியை பறித்தார். பிறகு அப்பெண் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். இளைஞரை அங்கிருந்தவர்கள் அடித்து, காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இளைஞர்கள், இவ்வாறு காதலை மறுக்கும் பெண்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவது மக்களையும், சிறார்களின் பெற்றோர்களையும் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.

A young man from Satara, Maharashtra, is being praised for his bravery in rescuing a schoolgirl who refused to accept his love by holding a knife to her neck.


60 ஆண்டுகால சேவைக்குப் பிறகு "மிக்-21' போர் விமானங்களுக்கு ஓய்வு

இந்திய விமானப்படையில் 60 ஆண்டுகளுக்கும் மேல் சேவையில் இருந்த ரஷிய தயாரிப்பான "மிக்-21' போர் விமானங்கள், செப்டம்பர் மாதத்தில் ஓய்வு பெற உள்ளன.இந்திய விமானப்படையின் 93 ஆண்டுகால வரலாற்றில் எந்த ஒரு போர் ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு இல்லை: கனிமொழி கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்

நமது நிருபர்உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசியல் இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று மக்களவையில் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள... மேலும் பார்க்க

நாடாளுமன்ற வளாகத்தில் விரைவில் மக்களிடம் முழு உடல் ஸ்கேனர் கருவிகள் மூலம் பரிசோதனை

நமது சிறப்பு நிருபர்நாடாளுமன்ற வளாகத்துக்கு வரும் பொதுமக்களை முழு உடல் ஸ்கேனர்கள் மூலம் பரிசோதனை செய்யும் வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது. இதையொட்டி, பாடி ஸ்கேனர்கள் எனப்படும் முழு உடல் பரிசோதனை கருவிக... மேலும் பார்க்க

ஊரக வேலை திட்டம் நிறுத்தப்படாது: மத்திய அமைச்சர் விளக்கம்

நமது நிருபர்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை (மன்ரேகா) நிறுத்தும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை என்று மக்களவையில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் த... மேலும் பார்க்க

விமானக் கட்டணம் கடும் உயர்வு பிரச்னை: மத்திய அமைச்சர் பதில்

விமானக் கட்டணங்கள் அவ்வப்போது கடுமையாக உயர்த்தப்படுவதை மத்திய அரசு ஒழுங்குமுறைப்படுத்துவதில்லை என்று அத்துறையின் இணை அமைச்சர் முரளீதர் மோஹோல் பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக மாநிலங்களவையில் திமுக உறுப்ப... மேலும் பார்க்க

8-ஆவது ஊதியக் குழு அமைப்பதில் தாமதம் ஏன்?: மத்திய அமைச்சர் பதில்

மத்திய அரசு ஊழியர்களுக்கான எட்டாவது ஊதியக் குழு அமைப்பதில் தாமதம் ஏன் என்று மக்களவையில் திருப்பெரும்புதூர் தொகுதி திமுக உறுப்பினரும், மக்களவை திமுக குழுத் தலைவருமான டி.ஆர். பாலு கேள்வி எழுப்பினார்.இதற... மேலும் பார்க்க