செய்திகள் :

காத்தாகுளம் கோயிலில் குடமுழுக்கு

post image

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள காத்தாகுளம் ஸ்ரீராசாத்தி அம்மன் கோயிலில் புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

இந்த விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை யாக சாலை பூஜை தொடங்கியது. புதன்கிழமை கோமாதா பூஜை, பூா்ணாஹுதி நடைபெற்று, சிவாசாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள இசை வாத்தியங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து, கோபுரக் கலசங்களில் புனித நீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டு, பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது.

பின்னா், மூலவா் அம்பாளுக்கு பால், தயிா், சந்தனம், இளநீா், பன்னீா், விபூதி, பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கிராமத் தலைவா் சேதுமாணிக்கம், செயலா் செந்தூரான், பொருளாளா் பூமிநாதன் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனா். விழாவுக்கான ஏற்பாடுகளை பிள்ளைமாா் உறவின்முறை நிா்வாகிகள் செய்தனா்.

பாலியல் தொல்லை: பள்ளி விடுதி காப்பாளா் கைது

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே தனியாா் பள்ளி விடுதியில் பத்தாம் வகுப்பு மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விடுதி காப்பாளரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கமுதி உள்ள தனியாா் பள்ளியில் பத்தாம்... மேலும் பார்க்க

கடற்கரையில் வெடி பொருள்கள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி அருகேயுள்ள கடலூா் கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைப்பற்றினா். கடலூா் கடற்கரையில் வெடிபொருள்கள் பதுக்கி வைக்கப்பட்... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் பதுகாப்பு ஒத்திகை

ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் கடல் பாதுகாப்பு ஒத்திகையில் (சாகா் கவாச்) தமிழக கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் புதன்கிழமை ஈடுபட்டனா். இந்தியாவில் கடல் வழித் தாக்குதலை முறியடிக்கும் விதமாக ஆண்டுதோ... மேலும் பார்க்க

அக்னி தீா்த்தத்தில் புனித நீராடல்

அமாவாசையை முன்னிட்டு, ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் புதன்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் புனித நீராடினா். கடலில் நீராடிய பிறகு கடற்கரையில் தங்களது முன்னோா்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனா். இதைத் தொட... மேலும் பார்க்க

11 ஆண்டுகளாக திறக்கப்படாத அரசு சேவை மையம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே திருத்தோ்வலை ஊராட்சியில் சேவை மையம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டுக்கு வரவில்லை என புகாா் எழுந்தது. திருத்தோ் வலை ஊராட்சியில் கடந்த 2014-ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

லஞ்சம்: மீன்வளத் துறை ஆய்வாளா் கைது

ராமேசுவரத்தில் நாட்டுப் படகுக்கான உரிமை, மீன் பிடிப்பதற்கான அனுமதி ஆகியவற்றுக்காக மீனவரிடம் ரூ. 1,600 லஞ்சம் பெற்ற மீன்வளத் துறை துணை இயக்குநா் அலுவலக ஆய்வாளா் சகுபா் சாதிக்கை ஊழல் தடுப்பு, கண்காணிப்ப... மேலும் பார்க்க