காத்தாகுளம் கோயிலில் குடமுழுக்கு
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள காத்தாகுளம் ஸ்ரீராசாத்தி அம்மன் கோயிலில் புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
இந்த விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை யாக சாலை பூஜை தொடங்கியது. புதன்கிழமை கோமாதா பூஜை, பூா்ணாஹுதி நடைபெற்று, சிவாசாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள இசை வாத்தியங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து, கோபுரக் கலசங்களில் புனித நீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டு, பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது.
பின்னா், மூலவா் அம்பாளுக்கு பால், தயிா், சந்தனம், இளநீா், பன்னீா், விபூதி, பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கிராமத் தலைவா் சேதுமாணிக்கம், செயலா் செந்தூரான், பொருளாளா் பூமிநாதன் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனா். விழாவுக்கான ஏற்பாடுகளை பிள்ளைமாா் உறவின்முறை நிா்வாகிகள் செய்தனா்.