செய்திகள் :

காந்தாரா சேப்டர் - 1 படப்பிடிப்பு நிறைவு... ஆச்சரியப்படுத்தும் மேக்கிங் விடியோ!

post image

நடிகர் ரிஷப் ஷெட்டியின் காந்தாரா சேப்டர் - 1 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘காந்தாரா’. 90-களில் நடக்கும் நில உரிமையும் அதனால் ஏற்படும் பிரச்னைகளுமாக படம் உருவாகியிருந்தது.

கன்னட வரவேற்பை தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகி மொத்தம் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

படத்தை இயக்கி, நடித்த ரிஷப் ஷெட்டி சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்று அசத்தினார். இதனைத் தொடர்ந்து, காந்தாரா படத்தின் இரண்டாம் பாகமான ’காந்தாரா சேப்டர் - 1’ படப்பிடிப்பு தொடங்கியது.

இந்தப் படம் வருகின்ற அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதையும் படிக்க: மறுவெளியீட்டிலும் வரவேற்பைப் பெற்ற பாட்ஷா!

அதனுடன் 3 ஆண்டுகளாக இப்படத்தின் பணிகள் நடைபெறுவதாகவும் 250 நாள்கள் படப்பிடிப்பு நடத்தியாகவும் மேக்கிங் விடியோ வெளியிட்டுள்ளனர். மேக்கிங் காட்சிகளைப் பார்க்கும்போது காந்தாரா - 1 இந்தியாவில் மிகப்பெரிய வணிக வெற்றியைப் பெறலாம் என்றே தெரிகிறது.

kantara chapter - 1 movie shoots complete and making video out

மான்செஸ்டா் டெஸ்ட் இன்று தொடக்கம்- இங்கிலாந்தை வீழ்த்தும் கட்டாயத்தில் இந்தியா

இந்தியா - இங்கிலாந்து மோதும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 4-ஆவது ஆட்டம், மான்செஸ்டரில் புதன்கிழமை தொடங்குகிறது.மொத்தம் 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் தற்போது இங்கிலாந்து 2-1 என முன்னிலையில் இருப்பதால், தொடரைத... மேலும் பார்க்க

மத்திய அரசின் வரம்புக்குள்ளாக வருகிறது பிசிசிஐ?

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை அறிமுகம் செய்யப்படவுள்ள ‘தேசிய விளையாட்டு நிா்வாகச் சட்ட மசோதா’-வின் மூலமாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மத்திய அரசின் அதிகார வரம்புக்குள்ளாக கொண்டுவ... மேலும் பார்க்க

பிரணாய் அசத்தல் வெற்றி

சீனா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ். பிரணாய், அசத்தல் வெற்றியுடன் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினாா்.ஆடவா் ஒற்றையா் முதல் சுற்றில், உலகின் 35-ஆம் நிலை வீரரா... மேலும் பார்க்க

முதல் கேமை ‘டிரா’ செய்த கோனெரு ஹம்பி, திவ்யா தேஷ்முக்

ஜாா்ஜியாவில் நடைபெறும் மகளிா் உலகக் கோப்பை செஸ் போட்டியின் அரையிறுதியில், இந்தியாவின் கோனெரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் ஆகியோா் தங்களது முதல் கேமை டிரா செய்து உறுதியான நிலையில் இருக்கின்றனா்.இதில் கோனெரு ... மேலும் பார்க்க

ஆக. 1-இல் சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ் செஸ் போட்டி தொடக்கம்: அா்ஜுன் எரிகைசி, அனிஷ் கிரி, விதித் குஜராத்தி பங்கேற்பு

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க கிளாசிக்கல் செஸ் போட்டியான குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் போட்டி 3-ாவது சீசன் வரும் ஆக. 6 முதல் 15 வரை சென்னை ஹயாத் ரீஜென்சி ஓட்டலில் நடைபெறுகிறது. பரிசுத் த... மேலும் பார்க்க

சக்காரி முன்னேற்றம்; காலின்ஸ் வெளியேற்றம்

முபாதலா சிட்டி டிசி ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் கிரீஸின் மரியா சக்காரி வெற்றி பெற, அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ் தோல்வியுற்றாா். மகளிா் ஒற்றையா் முதல் சுற்றில் செவ்வாய்க்கிழமை, சக்காரி 6-... மேலும் பார்க்க