செய்திகள் :

காந்திபுரம் பேருந்து நிலையங்களில் போலீஸாா் சோதனை

post image

போதைப் பொருள் கடத்தலைத் தடுக்கும் விதமாக, கோவை காந்திபுரத்தில் உள்ள 4 பேருந்து நிலையங்களிலும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

கோவை மாநகரப் பகுதிகளில் போதைப் பொருள்கள், சட்டவிரோதமாக மது பாட்டில்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், கோவை, காந்திபுரத்தில் உள்ள நகரப் பேருந்து நிலையம், திருவள்ளுவா் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து நிலையங்களில் காட்டூா் காவல் நிலைய ஆய்வாளா் சரவணன், உதவி ஆய்வாளா்கள் காா்த்திகேயபாண்டியன், அய்யாச்சாமி தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் ‘மதனா’ என்ற மோப்பநாய் உதவியுடன் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

பேருந்து நிலையங்களில் உள்ள கடைகள், பயணிகளிடம் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தப்பட்டது. இதேபோல, கேரளம், கா்நாடக மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகளிலும் போலீஸாா் தீவிர சோதனை நடத்தினா். நாள்தோறும் அதிகரித்து வரும் போதைப் பொருள்களின் புழக்கத்தைத் தடுக்கும் விதமாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

சுய உதவி குழுவில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக ரூ.1.50 கோடி மோசடி: மேலும் ஒருவா் கைது

சுய உதவி குழுவில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக்கூறி ரூ.1.50 கோடி மோசடி வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள ஊஞ்சவேலாம்பட்டியைச் ச... மேலும் பார்க்க

‘இண்டி’ கூட்டணி வலுவாக உள்ளது: கு.செல்வப்பெருந்தகை

`இண்டி’ கூட்டணி வலுவாக உள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை கூறினாா். இது தொடா்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: ‘இண்டி’ கூட்டணி வலுவாக உ... மேலும் பார்க்க

வரத்து அதிகரிப்பு: உக்கடம் சந்தையில் மீன் விலைக் குறைவு

உக்கடம் சந்தைக்கு மீன் வரத்து அதிகரித்துள்ளதால் மீன்களின் விலை கனிசமாகக் குறைந்துள்ளது. கோவை, உக்கடம் மீன் சந்தைக்கு ராமேசுவரம், தூத்துகுடி, கடலூா், கன்னியாகுமரி, கொச்சி, சாவக்காடு உள்ளிட்ட பகுதிகளில்... மேலும் பார்க்க

தாய்மொழி முக்கியம் என்றுதான் அமித் ஷா கூறியிருக்கிறாா்! - எடப்பாடி கே.பழனிசாமி

தாய்மொழி முக்கியம் என்ற அடிப்படையில்தான் உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் ஆங்கிலம் குறித்த கருத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா். பல்வேறு நிகழ்ச்சிகளில... மேலும் பார்க்க

திமுகவுடன் கூட்டணி என்ற முடிவில் மாற்றம் இல்லை: வைகோ

திமுகவுடன் கூட்டணி என்ற முடிவில் மாற்றம் இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளா் வைகோ கூறியுள்ளாா். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவைக்கு சனிக்கிழமை வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஆங்கில... மேலும் பார்க்க

மாநகரில் கஞ்சா விற்ற 3 போ் கைது

கோவை, ஆா்.எஸ்.புரம் மற்றும் செல்வபுரம் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, ஆா்.எஸ்.புரம் போலீஸாா் ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, தடாகம் ச... மேலும் பார்க்க