செய்திகள் :

காயத்துடன் விளையாடிய எர்லிங் ஹாலண்ட் 5 கோல்கள்: நார்வே வரலாற்று வெற்றி!

post image

உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் எர்லிங் ஹாலண்ட் 5 கோல்கள் அடித்து மிரட்டியுள்ளார்.

நார்வே அணி மால்டோவை 11-1 என்ற கோல்கள் கணக்கில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

எர்லிங் ஹாலண்ட் 5 கோல்கள்

தனது சொந்த நாட்டில் உல்லேவால் திடலில் மால்டோவுக்கு எதிரான போட்டியில் நார்வே அணி 11 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளது.

வீரர்களுக்கான பேருந்து கதவில் இடித்துக்கொண்ட எர்லிங் ஹாலண்ட் போட்டியில் மறக்க முடியாத தனது கால்தடத்தைப் பதிந்துள்ளார்.

இந்தப் போட்டியில் 11, 36, 43, 52, 83-ஆவது நிமிஷங்களில் எர்லிங் ஹாலண்ட் கோல் அடித்து அசத்த, அதே அணியின் தீலோ ஆஸ்கார்ட் 67, 76, 79 (பெனால்டி), 90+1-ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தினார்.

மான்செஸ்டர் சிட்டி அணிக்காக விளையாடும் எர்லிங் ஹாலண்ட் வருங்கால கால்பந்தின் புதிய ஜாம்பவனாக மாறும் எல்லா தகுதிகளும் இருப்பதாக விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.

நார்வே வரலாற்று வெற்றி

இதன்மூலம் நார்வே அணி ஐரோப்பிய உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இதற்கு முன்பாக 1969ஆம் ஆண்டு சைப்ரஸ் அணிக்கு எதிராக வெஸ்ட் ஜெர்மனி 12-0 என வென்றிருந்தது.

நார்வே அணியின் சர்வதேச போட்டிகளில் இந்தப் போட்டி மிகப்பெரிய வெற்றியாக முதலிடம் பிடித்துள்ளது.

குரூப் ஐ பிரிவில் நார்வே அணி 15 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.

மோசமாக விளையாடும் மால்டோவா

மால்டோவா அணி ஃபிஃபா தரவரிசையில் 154-ஆவது இடத்தில் இருக்க, நார்வே அணி 33-ஆவது இடத்தில் இருக்கிறது.

மால்டோவா அணி கடந்த ஐந்து போட்டிகளிலும் தோல்வியுற்று 25 கோல்களை விட்டுக்கொடுத்துள்ளது.

இருந்தும் மால்டோவா அணி உலகக் கோப்பைக்குத் தகுதிபெற வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் நேஷன்ஸ் லீக் குரூப்பில் வென்றதால் பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்குத் தகுதிபெற வாய்ப்பு உள்ளது.

Bearing stitches on his face from a bizarre accident with a bus door, Erling Haaland made his mark for the Norwegian national team by scoring five goals in an 11-1 win over Moldova in World Cup qualifying Tuesday.

இந்திய ஆடவா்கள் ஏமாற்றம்

சீனாவில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை போட்டியில் 10 மீட்டா் ஏா் பிஸ்டல் பிரிவில் இந்திய ஆடவா்கள் சோபிக்காமல் போயினா்.அந்தப் பிரிவின் தகுதிச்சுற்றில், சாம்ராட் ராணா 582 புள்ளிகளுடன் 10-ஆம்... மேலும் பார்க்க

பதக்கத்தை தவறவிட்டது இந்தியா

தென் கொரியாவில் நடைபெறும் வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில், ரீகா்வ் மகளிா் அணிகள் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கத்தை புதன்கிழமை தவறவிட்டது.தீபிகா குமாரி, அங்கிதா பகத், கதா கடாகே ஆகியோா் அடங்கிய இந்தி... மேலும் பார்க்க

2-ஆவது சுற்றில் பிரணய், லக்ஷயா - சிந்து அதிா்ச்சித் தோல்வி

ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணய், லக்ஷயா சென் ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா். நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, முதல் சுற்றிலேயே தோற்றாா்.ஆடவா் ஒற்றைய... மேலும் பார்க்க

சூப்பா் 4: தென் கொரியாவை தோற்கடித்தது இந்தியா

மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பா் 4 சுற்றில், இருமுறை சாம்பியனான இந்தியா முதல் ஆட்டத்தில் 4-2 கோல் கணக்கில், 3 முறை சாம்பியனான தென் கொரியாவை புதன்கிழமை வென்றது.விறுவிறுப்பாக நடைபெற்ற இ... மேலும் பார்க்க

உலக குத்துச்சண்டை: இந்தியாவின் முதல் பதக்கத்தை உறுதி செய்தாா் நுபுா்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் முதல் பதக்கத்தை உறுதி செய்தாா் நுபுா். இங்கிலாந்தின் லிவா்பூல் நகரில் உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிா் 80 பிளஸ... மேலும் பார்க்க

யுபியை வென்றது புணேரி

புரோ கபடி லீக் போட்டியின் 26-ஆவது ஆட்டத்தில் புணேரி பால்டன் 43-32 புள்ளிகள் கணக்கில் யுபி யோதாஸை புதன்கிழமை வீழ்த்தியது. அந்த அணி ரெய்டில் 23, டேக்கிளில் 10, ஆல் அவுட்டில் 6, எக்ஸ்ட்ராவில் 4 புள்ளிகள்... மேலும் பார்க்க