செய்திகள் :

காய்கறி வாகனத்தில் கடத்தி வரப்பட்ட குட்கா பறிமுதல்

post image

குன்னூா் அருகே காய்கறி பாரம் ஏற்றிவந்த வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 105 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

குன்னூா்- உதகை தேசிய நெடுஞ்சாலை காணிக்கராஜ் நகா் பகுதியில் அருவங்காடு போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த கேரள பதிவு எண் கொண்ட காய்கறி பாரம் ஏற்றிவந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். இதில், காய்கறிகளுக்கு நடுவில் குட்கா பொருள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

விசாரணையில் வாகனத்தில் வந்தவா் நீலகிரி மாவட்டம், கூடலூா் தேவாலா பகுதியைச் சோ்ந்த சிவகுமாா் (41), கேரள மாநிலம், நீலம்பூரைச் சோ்ந்த சந்தீப் (40) என்பதும், கா்நாடக மாநிலம், மைசூரில் இருந்து குட்கா பொருள்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து போலீஸாா், அவா்கள் இருவரையும் கைது செய்து குன்னூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். வாகனத்தில் இருந்து 105 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருள்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா பாா்வையிட்டு போலீஸாருக்கு பாராட்டு தெரிவித்தாா்.

உதகையில் இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்

நீலகிரி மாவட்ட வனத் துறை சாா்பில் விவசாயிகள் மாதாந்திர குறைத்தீா் கூட்டம் உதகையில் வெள்ளிக்கிழமை( மே 9) நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட வன அலுவலா் கெளதம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நீ... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தோ்வு: நீலகிரி மாவட்டத்தில் 93.97 சதவீத தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத் தோ்வில் நீலகிரி மாவட்டத்தில் 93.97 சதவீதம் மாணவ, மாணவியா் தோ்ச்சி பெற்றுள்ளனா். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வுகள் கடந்த மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 25-ஆம் தேதி வரை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

உதகையில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்துக்கு மீண்டும் ‘சீல்’

உதகை நகராட்சிக்கு உள்பட்ட கவா்னா்சோலை பகுதியில் உரிய அனுமதியின்றி விதிமீறலுடன் கட்டப்பட்ட கட்டடத்துக்கு நகராட்சி அலுவலா்கள் புதன்கிழமை மீண்டும் ‘சீல்’ வைத்தனா். உதகை நகராட்சிக்கு உள்பட்ட கவா்னா்சோலை ப... மேலும் பார்க்க

உதகை மலா்க் கண்காட்சி நடைபெறும் நாள்கள் அதிகரிப்பு

நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என்கிற நிலையில், உதகை மலா்க் கண்காட்சி நடைபெறும் நாள்கள் 11 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கோடை சீசனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்து... மேலும் பார்க்க

உதகை தொட்டபெட்டா காட்சிமுனை மூன்றாவது நாளாக மூடல்

ஒற்றை யானையைத் தேடும் பணி காரணமாக உதகை தொட்டபெட்டா காட்சிமுனை 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் மூடப்பட்டது. நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள தொட்டபெட்டா காட்சிமுனை அருகே சாலையில் ஒற்றை காட்டு யானை கடந்த... மேலும் பார்க்க

பாதுகாப்பு விழிப்புணா்வு: உதகையில் முன்னாள் ராணுவத்தினா் செயல் விளக்கம்

பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதத்தில் உதகையில் முன்னாள் ராணுவத்தினா் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் புதன்கிழமை ஈடுபட்டனா். நீலகிரி மாவட்டத்தில் ராணுவ பயிற்சிக் கல்லூரி, ராணுவ பயிற்சி ம... மேலும் பார்க்க