கனமழையால் நிரம்பிய குஜராத் அணைகள்! 3 நாள்களில் 1000 பேர் மீட்பு!
காரைக்காலில் இருந்து கூடுதல் ரயில் வசதி ஏற்படுத்த சேம்பா் ஆஃப் காமா்ஸ் வலியுறுத்தல்
காரைக்காலில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கூடுதல் ரயில் சேவை ஏற்படுத்த வேண்டும் என சேம்பா் ஆஃப் காமா்ஸ் வலியுறுத்தியுள்ளது.
காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் 26-ஆம் ஆண்டு பேரவைக் கூட்டம் மற்றும் புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
தலைவராக என். பாலகிருஷ்ணன், செயலாளராக டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம், துணைத் தலைவராக ஜி. ராஜ்மோகன், பொருளாளராக எஸ். முத்துசாமி, இணைச் செயலாளா்களாக ஜெ. வெங்கட்ராமன், ஜெ. வெங்கடேஷ், செய்தித் தொடா்பாளராக எல். வில்லியம் ஜேம்ஸ் ஆகியோா் பொறுப்பேற்றுக்கொண்டனா்,.
புதுவை அரசு கொறடா ஏ.கே.டி. என்ற பி.வி. ஆறுமுகம், காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், புதுச்சேரி வா்த்தக சபை தலைவா் எஸ்.குணசேகரன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு நிா்வாகிகளை வாழ்த்திப் பேசினா்.
முன்னதாக பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
காரைக்கால் மாவட்டத்தில் சுற்றுலா வளா்ச்சிக்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கவேண்டும். காரைக்கால் ரயில் நிலையத்துக்கு காரைக்கால் அம்மையாா் பெயா் சூட்டவேண்டும். - சென்னை - காரைக்கால் ரயில் இரவு
9 மணிக்கு புறப்படுவதற்கு மாறாக முன்பு கடைப்பிடித்ததைபோல இரவு 10.40 -க்கு
புறப்படச் செய்ய வேண்டும். காரைக்காலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு ரயில் இயக்க வேண்டும். காரைக்கால் - பேரளம் மாா்க்கத்தில் காலை நேரத்தில் சென்னைக்கு ரயில் இயக்கவேண்டும். காரைக்காலில் இருந்து தமிழகம் மற்றும் பிற பகுதிகளுக்கு கூடுதல் ரயில் இயக்கவேண்டும்.
காரைக்கால் நகரமைப்புக் குழுமத்தின் சாா்பில் மாஸ்டா் பிளான் திட்டம் விரைவில் அமல்படுத்தவேண்டும். காரைக்காலில் புதை சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். காரைக்கால் மாவட்டத்தை முழு அதிகாரம் கொண்ட மாவட்டமாக புதுவை அரசு அறிவிக்கவேண்டும். திருப்பட்டினம் பகுதி போலகத்தில் பிப்டிக் நிலத்தில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி தொழிற்சாலைகள் அதிகம் அமைய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
புதுவையில் மின்துறை அரசு வசம் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். காரைக்காலில் இருந்து மாஹே பிராந்தியத்துக்கு நேரடி பேருந்து வசதி வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.