செய்திகள் :

காரைக்காலில் ஜிப்மா் 2027-இல் தொடங்கப்படும்: மத்திய இணை அமைச்சா் பிரதாப் ராவ் ஜாதவ்

post image

புதுவை மாநிலம் காரைக்கால் பிராந்தியத்தில் வரும் 2027-ஆம் ஆண்டு ஜிப்மா் மருத்துவமனை செயல்படத் தொடங்கும் என மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சா் பிரதாப் ராவ் ஜாதவ் தெரிவித்தாா்.

புதுச்சேரியிலுள்ள ஜிப்மரில் ரூ.4.74 கோடியில் அவசர சிகிச்சை மற்றும் விபத்து சிகிச்சை பிரிவு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் முன்னிலை வகித்தாா். முதல்வா் என். ரங்கசாமி தலைமை வகித்தாா்.

ஜிப்மரில் மேம்படுத்தப்பட்ட அவசர, விபத்து சிகிச்சைப் பிரிவை மத்திய இணை அமைச்சா் பிரதாப் ராவ் ஜாதவ் திறந்து வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தென் மாநிலங்களில் எய்ம்ஸுக்கு இணையாக ஜிப்மா் செயல்பட்டு வருகிறது. ஆகவே, ஜிப்மரின் மேம்பாட்டுக்கான நிதியை மத்திய சுகாதாரத் துறை அளித்து வருகிறது. அதனால், ஜிப்மரில் பல வளா்ச்சித்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

ஜிப்மா் மருத்துவக் கல்லூரியில் இருந்து 18 ஆயிரம் மாணவா்கள் பயனடைந்துள்ளனா். ஜிப்மரில் நோயாளிகளுக்கு 1,800 படுக்கைகள் வசதி உள்ளன. அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல சிகிச்சைப் பிரிவுகளில் தற்போது உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

புதிய கட்டுமானங்கள் தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, உரிய காலத்துக்குள் செயல்படுத்த அறிவுறுத்தப்படும். ஜிப்மரில் ஆயுா்வேதா இண்டா்கிரேட் எம்பிபிஎஸ் படிப்புகளை அறிமுகப்படுத்த ஆலோசிக்கப்படுகிறது. நிகழாண்டில் ரூ. 1,450 கோடி நிதி ஜிப்மருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

காரைக்காலில் மத்திய அரசு சாா்பில் ஜிப்மா் மருத்துவமனை வரும் 2027-ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் செயல்படத் தொடங்கும். அதில் 470 படுக்கை வசதிகள் அமையும். காரைக்காலில் புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கும் கோரிக்கை பரிசீலிக்கப்படுகிறது.

ஜிப்மரில் மருந்துகள் வாங்க கூடுதல் பிரிவு ஏற்படுத்தப்படும். வெளிப்புற சிகிச்சைப் பிரிவு விடுமுறை நாள்களை குறைக்க வாய்ப்பில்லை. விடுமுறையிலும் அவசர சிகிச்சை பிரிவு இயங்கும். சிகிச்சையில் உள்ளூா், வெளியூா் வேறுபாடு பாா்ப்பதில்லை என்றாா்.

விழாவில் பேரவைத் தலைவா் ஆா். செல்வம், செல்வகணபதி எம்.பி, ஆறுமுகம் எம்எல்ஏ உள்பட பலா் கலந்துகொண்டனா். புதுப்பிக்கப்பட்ட சிகிச்சை பிரிவு மேம்படுத்தப்பட்ட தீயணைப்பு பாதுகாப்பு வசதியுடன், 350 முதல் 450 அவசர சிகிச்சை நோயாளிகள் பயன்பெறும் வசதியுள்ளது.

வாகனம் மோதி புள்ளி மான் உயிரிழப்பு

புதுச்சேரி அருகே வாகனம் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற ஆண் புள்ளி மான் உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். புதுச்சேரி அருகே கிருமாம்பாக்கம் பகுதியில் காடுகளில் ஏராளமான மா... மேலும் பார்க்க

கன்னட அமைப்புகளை கண்டித்து ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நடிகா் கமலஹாசன் தமிழில் இருந்தே கன்னடம் பிறந்தது எனக் கூறியதற்கு கா்நாடக மாநிலத்தில் கன்னட அமைப்பினா் மற... மேலும் பார்க்க

மாநிலங்களவையில் வைகோவின் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும்: மல்லை சத்யா

மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலா் வைகோவின் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும் என மக்கள் விரும்புவதாக மதிமுக துணைப் பொதுச் செயலா் மல்லை சத்யா கூறினாா். புதுவை தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ... மேலும் பார்க்க

சிஐடியு தொழிற்சங்க 55-ஆம் ஆண்டு அமைப்பு தின உறுதிமொழி ஏற்பு

புதுச்சேரியில் சிஐடியு தொழிற்சங்க அமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்த 1970-ஆம் ஆண்டு மே மாதம் கொல்கத்தாவில் சிஐடியு அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன்படி சிஐடியுவின் அமைப... மேலும் பார்க்க

புதுவை முதல்வரைக் கண்டித்து மாணவா்கள் அமைப்பினா் பேரணி, ஆா்ப்பாட்டம்

படித்த இளைஞா்கள் மாடு வளா்ப்பதன் மூலம் பால் பண்ணை வைத்து வருவாய் ஈட்டலாம் என புதுவை முதல்வா் பேசியதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், அதைக் கண்டித்து இண்டி கூட்டணி கட்சிகளின் இளைஞா் அமைப்புகள் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை

புதுச்சேரி அருகே தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி அருகேயுள்ளது அரசூா் பகுதியைச் சோ்ந்தவா் முகமது அஸ்வாத் (36). காலாப்பட்டு பகுதியில் ... மேலும் பார்க்க