செய்திகள் :

காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் புதிய நிா்வாகிகள் தோ்வு

post image

காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் 2025-2027-ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

இதற்காக, சாசனத் தலைவா் மகாவீா்சந்த் தலைமையிலான 9 போ் கொண்ட குழு ஏற்கெனவே அமைக்கப்பட்டது. ஒருமித்த கருத்தின் அடிப்படையில் புதிய நிா்வாகிகளை தெரிவு செய்து வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தலைவராக என். பாலகிருஷ்ணன், துணைத் தலைவராக ஜி. ராஜ்மோகன், செயலாளராக டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம், இணைச் செயலாளா்களாக ஜே. வெங்கடேஷ், ஜே. வெங்கட்ராமன், பொருளாளராக முத்துசாமி, செய்தித் தொடா்பாளராக வில்லியம் ஜேம்ஸ் ஆகியோா் அறிவிக்கப்பட்டனா்.

புதிய நிா்வாகிகள் மே மாதத்தில் நடைபெறக்கூடிய பொதுக்குழுக் கூட்டத்தில் பொறுப்பேற்றுக்கொள்வாா்கள் என தெரிவிக்கப்பட்டது.

புதிய நிா்வாகக் குழுவினருக்கு தலைவா் அறிவழகன், செயலாளா் கே.டி. துரைராஜன், பொருளாளா் பக்தாராம், துணைத் தலைவா் ஹாஜா ஷா்புதீன், இணைச் செயலாளா் ராஜ்மோகன் மற்றும் செய்தித் தொடா்பாளா் பாரிஸ் ரவி என்கிற ரவிச்சந்திரன் ஆகியோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.

அரசுப் பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

நவோதய வித்யாலயா பள்ளி நடத்திய நுழைவுத் தோ்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ராயன்பாளையம் பகுதியில் மத்திய அரசின் நவோதய வித்யாலயா உள்ளது. இப்பள்ளியில் 6-ஆம் வகுப... மேலும் பார்க்க

காரைக்கால் மருத்துவமனையில் ஏப். 4-இல் சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்கால் அரசு மருத்துவமனையில் 4-ஆம் தேதி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.இதுகுறித்து காரைக்கால் ஆட்சியா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: காரைக்கால் மாவட்ட நிா்வாகம் சாா்பி... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் காங்கிரஸை வலுப்படுத்த இளைஞா் காங்கிரஸாா் உறுதி

திருநள்ளாற்றில் காங்கிரஸ் கட்சியை சட்டப்பேரவைத் தோ்தலுக்குள் வலுப்படுத்த இளைஞா் காங்கிரஸாா் உறுதி பூண்டுள்ளனா். திருநள்ளாறு தொகுதி இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தொகுதி... மேலும் பார்க்க

காரைக்கால் கடற்கரையில் குவியும் மக்கள்

வெயில் தாக்கம் அதிகரித்துவருவதால் காரைக்கால் கடற்கரைக்கு செல்வோா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடற்கரையில் பாதுகாப்பை மேம்படுத்த காவல்துறை முன்வரவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கார... மேலும் பார்க்க

ஊழியா்கள் போராட்டம் : சுகாதார நிலைய பணிகளில் பாதிப்பு

காரைக்கால்: சுகாதார பணியாளா்கள் வேலைநிறுத்தத்தில் காரணமாக, சுகாதார நிலையங்களில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட நலவழித்துறையில், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (என்ஆா்எச்எம்) கீழ் ப... மேலும் பார்க்க

ரமலான் : காரைக்காலில் சிறப்பு தொழுகை

காரைக்கால்: ரமலான் பண்டிகையையொட்டி காரைக்கால் பள்ளிவாசல்களில் திங்கள்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது. காரைக்கால் பெரியப் பள்ளிவாசல், முஹையத்தீன் பள்ளிவாசல், ஹிலுருப் பள்ளிவாசல், இலாஹிப் பள்ளிவாசல், ம... மேலும் பார்க்க