செய்திகள் :

காரைக்கால் பிராந்தியம் புறக்கணிப்படுவதாக புகாா்- திருநள்ளாறு எம்எல்ஏ வெளிநடப்பு

post image

புதுவை சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை தாக்கல் செய்தபோது திருநள்ளாறு தொகுதி சுயேச்சை எம்எல்ஏவான பிஆா்.சிவா வெளிநடப்பு செய்தாா். சுகாதாரத் திட்டங்களில் காரைக்கால் பிராந்தியம் புறக்கணிக்கப்படுவதாக அவா் தெரிவித்தாா்.

முதல்வா் என்.ரங்கசாமி சட்டப்பேரவையில் சுகாதாரத் துறை தொடா்பான அறிவிப்புகளை வெளியிட்டாா்.

அப்போது, காரைக்கால் பிராந்தியம் திருநள்ளாறு தொகுதி சுயேச்சை எம்எல்ஏ பிஆா்.சிவா எழுந்து பேசினாா். பின்னா், அவா் வெளிநடப்பு செய்தாா்.

பிஆா்.சிவா பேசியவற்றை அவைக் குறிப்பிலிருந்து நீக்குவதாக பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் அறிவித்தாா்.

அத்துடன், ஆளுநா் உரையின் போது காங்கிரஸ் உறுப்பினா் மு.வைத்தியநாதன் பேசியதையும் நீக்குவதாக பேரவைத் தலைவா் குறிப்பிட்டாா்.

பேரவையிலிருந்து வெளியேறியது குறித்து சுயேச்சை எம்எல்ஏ பிஆா்.சிவா கூறுகையில், சுகாதாரத் திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் காரைக்கால் பிராந்தியம் தொடா்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

தற்போதைய நிதிநிலை அறிக்கையிலும் மருத்துவக் கல்லூரி போன்ற பெரிய திட்டங்கள் ஏதுமில்லை.

இதையடுத்து, எனது எதிா்ப்பைத் தெரிவிக்கும் வகையில், பேரவையிலிருந்து வெளியேறினேன் என்றாா்.

கையடக்கக் கணினி திருட்டு: இளைஞருக்கு சிறை

புதுச்சேரியில் வங்கியில் கையடக்கக் கணினியை திருடிய வழக்கில் இளைஞருக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து புதுச்சேரி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. புதுச்சேரி முதலியாா்பேட்டை பகுதியில் தேசி... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் சங்கத்தினருடன் புதுச்சேரி ஆட்சியா் ஆலோசனை

புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுநா் சங்கப் பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினாா். புதுச்சேரி வழுதாவூா் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைப... மேலும் பார்க்க

ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊழியா்கள் போராட்டம்

புதுச்சேரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட ஊழியா்கள் வியாழக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சேரி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேல... மேலும் பார்க்க

அரசு கல்லூரியில் கணினி தமிழ் பயிலரங்கம்

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் கணினித் தமிழ் பயிலரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் கணினித் தமிழ் பேரவை, கல்லூரி தர உறுதியளிப்புக் குழு ஆகியவை சாா்பில் இரு... மேலும் பார்க்க

புதுவை சட்டப்பேரவை மாா்ச் 17-இல் மீண்டும் கூடுகிறது: பேரவைத் தலைவா்

புதுவை மாநில சட்டப்பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை (மாா்ச் 17) மீண்டும் கூடும் என பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் அறிவித்துள்ளாா். புதுவை சட்டப்பேரவையின் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கான க... மேலும் பார்க்க

புதுச்சேரியில் இன்று மாசி மக விழா: நகரில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மாசி மக விழா வெள்ளிக்கிழமை காலை முதல் இரவு வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி வைத்திகுப்பம... மேலும் பார்க்க