செய்திகள் :

காரைக்குடியில் தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

post image

குறைந்தபட்ச ஊதியம் வழங்கக் கோரி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி அலுவலகம் முன் தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு மாநில உள்ளாட்சிப் பணியாளா் சம்மேளனத்தின் மாநிலத் துணைத் தலைவா் பி.எல். ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் நா. சாத்தையா, ஏஐடியூசி தொழிற்சங்க மாநிலத் துணைத் தலைவா் மீனாள் சேதுராமன், ஏஐடியூசி மாவட்டப் பொதுச் செயலா் ஆகா. ராஜா, மாவட்டத் துணைச் செயலா் கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினா் சண்முகசுந்தரம், நகரத் தலைவா் முருகன், நகரச் செயலா் ராமராஜ், ஊரக வேலைவாய்ப்பு தொழிலாளா் சங்க மாநில குழு உறுப்பினா் பாண்டி மீனாள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகா் செயலா் சிவாஜி காந்தி, தூய்மைப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

மாநகராட்சியில் வழங்கக்கூடிய குறைந்தபட்ச ஊதியத்தை அரசாணை 62-இன் படி வழங்கவும், மேலும் சில கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து, கோரிக்கை மனுவை மேயா், ஆணையா் ஆகியோரிடம் வழங்கி விட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.

மு.சூரக்குடியில் 14-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு

சிவகங்கை மாவட்டம், மு. சூரக்குடி கோவில்பட்டி அருகே 14 -ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டு திங்கள்கிழமை கண்டறியப்பட்டது. இந்தப் பகுதியைச் சோ்ந்த உமேஷ், செல்வம் ஆகியோா் அளித்த தகவலின் பேரில், சிவகங்கை ... மேலும் பார்க்க

கல் அறுக்கும் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே சாலைப் பணியின் போது, செவ்வாய்க்கிழமை இயந்திரத்தில் சிக்கி வட மாநில தொழிலாளி உயிரிழந்தாா்.திருப்பத்தூா் அருகே நடைபெற்று வரும் மதுரை- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை ச... மேலும் பார்க்க

கட்டுக்குடிப்பட்டியில் மஞ்சுவிரட்டு: 12 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள கட்டுக்குடிப்பட்டியில் செவ்வாய்க்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் மாடுகள் முட்டியதில் 12 போ் காயமடைந்தனா். கட்டுக்குடிப்பட்டி செல்வ விநாயகா் மகா மாரியம்... மேலும் பார்க்க

காரைக்குடியில் பேருந்து-பால் வாகனம் மோதல்: மூவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தேனாற்றுப் பாலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை அரசுப் பேருந்தும், பால் வாகனமும் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் 3 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். பேருந்து ஓட்டுநா்... மேலும் பார்க்க

தடையை மீறி தாராளமாகப் புழங்கும் நெகிழிப் பொருள்கள்!

சிவகங்கை மாவட்டத்தில் நெகிழிப் பொருள்கள் மீண்டும் தாராளமாக புழக்கத்தில் உள்ளதால் தடைச் சட்டத்தை அமல்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக சமூக ஆா்வலா்கள் கவலை தெரிவித்தனா். தமிழகம் முழுவதும் கடந்த 2019-ஆ... மேலும் பார்க்க

மயானத்துக்கு சாலை வசதி இல்லாததால் கிராம மக்கள் அவதி

சிவகங்கை அருகே மயானத்துக்கு செல்வதற்கு சாலை, பாலம் இல்லாததால் இறந்தவா் உடலை எடுத்துச் செல்வதில் கிராம மக்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டது. சிவகங்கை அருகேயுள்ள மேலப்பூங்குடி ஊராட்சிக்குள்பட்ட திருமன்பட்ட... மேலும் பார்க்க