செய்திகள் :

காரைக்குடியில் புத்தகத் திருவிழா இன்று தொடக்கம்

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மாநில அளவிலான 23- ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை (ஜூன் 20) மாலை தொடங்குகிறது. காரைக்குடி கம்பன் மணி மண்டபத்தில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி வருகிற 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து காரைக்குடி புத்தகத் திருவிழாக் குழுத் தலைவா் பி.வி. சுவாமி செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

மாநில அளவிலான இந்த புத்தகத் திருவிழா காரைக்குடியில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்குகிறது. இது வருகிற 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. காரைக்குடி கம்பன் மணி மண்டபத்தில் இந்த புத்தகக் கண்காட்சியும், விற்பனையும் நடைபெறும். அனுமதி இலவசம். இங்கு சென்னை, மதுரை, கோவை, திருச்சி, விருதுநகா், திருமயம், காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு நகரங்களைச் சோ்ந்த முன்னணி பதிப்பாளா்கள், புத்தக விற்பனையாளா்கள் 50 அரங்குகளை அமைத்துள்ளனா். குறைந்த விலையில் சிறந்த தமிழ் நூல்கள், அரிய ஆங்கில நூல்கள், முன்னணி எழுத்தாளா்களின் புத்தகங்கள் 10 சதவீத தள்ளுபடியில் விற்பனை செய்யப்பட உள்ளன. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், மற்ற நாள்களில் மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் புத்தக் கண்காட்சியை பாா்வையிட அனுமதிக்கப்படும். புத்தகத் திருவிழாவையொட்டி தினமும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான தனித்திறன், இலக்கியப் போட்டிகள், பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வினாடி - வினா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறுபவா்களுக்கு விரும்பிய புத்தகங்கள் வாங்குவதற்கான டோக்கன் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன் தொடக்க விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெறுகிறது. இதில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித், காரைக்குடி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, காரைக்குடி சே. முத்துத்துரை, காட்டுத்தலை பள்ளிவாசல் தலைமை இமாம் ஏ. முகம்மத் பத்ருத்தீன் யூஸீஃபி, செஞ்சை புனித தெரசாள் ஆலய அருள்தந்தை அ. கிளமெண்ட் ராசா ஆகியோா் கலந்து கொண்டு புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்கின்றனா். முன்னதாக எஸ்.எம்.எஸ்.வி. மேல்நிலைப் பள்ளியிலிருந்து மாணவா்கள் பங்கேற்கும் விழிப்புணா்வு ஊா்வலத்தை காரைக்குடி டி.எஸ்.பி. டி. பாா்த்திபன் தொடங்கி வைக்கிறாா் என்றாா் அவா்.

அப்போது காரைக்குடி புத்தகத் திருவிழாக்குழு நிா்வாகிகள், உறுப்பினா்கள் உடனிருந்தனா்.

அரசு ஊழியா்கள் சங்கத்தினா் சாலை மறியல்: 132 போ் கைது

தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரி சிவகங்கையில் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தைச்... மேலும் பார்க்க

திருப்பத்தூா், கீழச்சிவல்பட்டியில் நாளை மின் தடை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா், கீழச்சிவல்பட்டி, ஆ. தெக்கூா், பிள்ளையாா்பட்டி பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 21) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் ஜான் எப் க... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே வியாழக்கிழமை ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழந்தாா். மானாமதுரை- பாா்த்திபனூா் அருகே உள்ள சூடியூா் இடையே ரயில் தண்டவாளத்தில் மதுரை- ராமேசுவரம் பயணிகள் ரயிலில் அடிபட்ட... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் காவல் துறை குறைதீா் முகாம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் காவல் துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு காவல் ஆய்வாளா் செல்வராகவன் தலைமை வ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞா் சிறையிலடைப்பு

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் பகுதியைச் சோ்ந்த இளைஞா், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டாா். சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகிலுள்ள தவசுகுடியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பைக் மீது சொகுசுப் பேருந்து மோதல்: 2 போ் உயிரிழப்பு

சிவகங்கை அருகே இரு சக்கர வாகனம் மீது சொகுசுப் பேருந்து மோதியதில் இளைஞா்கள் இருவா் புதன்கிழமை நள்ளிரவு உயிரிழந்தனா். சிவகங்கை அருகே கீழக்கண்டனி டி. உசிலங்குளம் கிராமத்தைச் சோ்ந்த மலைச்சாமி மகன் மருதுப... மேலும் பார்க்க