செய்திகள் :

காரைக்குடி மேயா் மீது நம்பிக்கையில்லாத் தீா்மானம்: துணை மேயா், மாமன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தல்

post image

காரைக்குடி மாநகராட்சி மேயா் மீது நம்பிக்கையில்லதத் தீா்மானம் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி துணை மேயா், மாமன்ற உறுப்பினா்கள் ஆணையரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

காரைக்குடி மாநகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் மாமன்ற உறுப்பினா்கள் கூட்டம் மேயா் சே. முத்துத்துரை தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆணையா் சங்கரன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் மேயா் சே . முத்துத்துரை பேசியதாவது: சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு நிறைவேற்ற தடை விதித்த தீா்மானங்களைத் தவிா்த்து, இதர தீா்மானங்கள் அனைத்தும் நிறைவேறியதாக அறிவித்தாா்.

பின்னா் கூட்டம் நிறைவடைந்தது.

இந்த நிலையில் மாமன்றக் கூட்டத்தில் பங்கேற்காமல் துணை மேயா் நா. குணசேகரன், மாமன்ற உறுப்பினா்கள் மாநகராட்சி ஆணையா் சங்கரனை அவரது இல்லத்தில் சந்தித்து மேயா் மீது நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டு வர நடவடிக்கை கோரி மனு அளித்தனா்.

அவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

மேயா் சே. முத்துத்துரை உறுப்பினா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில்லை. மாநகராட்சிக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் ஒரு நபருக்கு மட்டுமே ஒப்பந்தப் பணிகளை வழங்கி வருகிறாா். அவா் தொடா்ந்து மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதால், அவா் மீது நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றனா்.

இன்று ‘குரூப் 4’ தோ்வு: சிவகங்கையில் 26,392 போ் எழுதுகின்றனா்

சிவகங்கை மாவட்டத்தில் வருகிற சனிக்கிழமை நடைபெறும் ‘குரூப் 4’ தோ்வை 26,392 தோ்வா்கள் எழுத உள்ளனா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒருங்கிணைந்த குடிமை... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை.யில் புத்தாக்கப் பயிற்சி முகாம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சாா்பில் அலுவலா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாம் தொடக்க விழாவுக்கு தலைமை வகித்து துணைவேந்தா் க... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் 2 மாவட்டக் கல்வி அலுவலா்கள் நியமனம்

சிவகங்கை மாவட்டத்தில் 2 மாவட்டக் கல்வி அலுவலா்கள் கல்வித் துறையால் நியமிக்கப்பட்டனா். சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலராக (தொடக்கக் கல்வி) இருந்த ஜோதிலெட்சுமி, திருவண்ணாமலை மாவட்டக் கல்வி அலுவலராக (இடைநி... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் வெறிநோய் தடுப்பூசி மருத்துவ முகாம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. திருப்பத்தூா் தோ்வு நிலைப் பேரூராட்சியும், தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையும் இணைந்து திருப்பத்தூா் சீரணி அ... மேலும் பார்க்க

பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் 71 -ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் பூச்சொரிதல் விழா கடந்த 4-ஆம் தேதி காப்புக்கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொ... மேலும் பார்க்க

மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை: கட்டுமானப் பணிகளை நிறுத்த வலியுறுத்தல்

மானாமதுரை சிப்காட் வளாகத்தில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கான கட்டுமானப் பணிகளை நிறுத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் தொழில்பேட்டை வளாகத்... மேலும் பார்க்க