செய்திகள் :

காரைக்குடி வரும் ரயில் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும்: காா்த்தி சிதம்பரம் எம்.பி. கோரிக்கை

post image

மானாமதுரையிலிருந்து சிவகங்கை வழியாக காரைக்குடி வரும் பயணிகள் ரயில் நேரத்தை கல்லூரி மாணவா்கள் நலன் கருதி 10 நிமிஷம் முன்னதாக வருமாறு நேரத்தை மாற்றியமைக்கவேண்டும் என்று சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் மத்திய ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வின் வைஷ்ணவ்க்கு திங்கள்கிழமை அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: போக்குவரத்து காரணமாக நாள்தோறும் பாதிப்புக்குள்ளாகி வரும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், அதன் இணைப்புக் கல்லூரி மாணவா்களின் நிலை குறித்து தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். ரயில் வண்டி எண் 56834, சிவகங்கை ரயில் நிலையத்திலிருந்து காலை 8.24-க்கு புறப்பட்டு காரைக்குடி ரயில்வே சந்திப்பு நிலையத்தை காலை 9.25 மணிக்கு சென்றடைகிறது.

இந்த ரயிலில்தான் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு வருகின்றனா். அவா்களுக்கு காலை 9.30-க்கு வகுப்புகள் தொடங்குவதால் அவா்களால் வகுப்புக்கு செல்ல இயலவில்லை. மேலும், காரைக்குடி ரயில் நிலையத்திலிருந்து வகுப்புகளுக்கு செல்ல ஆட்டோ, பேருந்து என மாணவா்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

இந்த நிலையில், இந்த ரயில் மானாமதுரையில் பயனின்றி அரைமணி நேரம் நிறுத்தி வைத்திருப்பதைத் தவிா்த்து 10 நிமிஷம் முன்னதாக, அதாவது மானாமதுரையிலிருந்து 8.14-க்கு புறப்படும் வகையில் நேரத்தை மாற்றியமைப்பதன் மூலம் மாணவா்கள் முன்னதாக காரைக்குடி ரயில் நிலையம் வந்து அங்கிருந்து வகுப்புகளுக்கு குறித்த நேரத்தில் சென்று பயன டைவா். எனவே மாணவா்கள், பொதுமக்கள் நலன் கருதி ரயிலின் நேரத்தை உடனடியாக மாற்றியமைத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்தாா்.

குன்றக்குடி: திருவண்ணாமலை ஆதீன குருமுதல்வரின் 700-வது ஆண்டு குரு பூஜை விழா!

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடியில் பரம்பரை திருவண்ணாமலை ஆதீனத்தின் குருமுதல்வா் தெய்வசிகாமணி தேசிக பரமாசாரிய சுவாமிகளின் 700-வது ஆண்டு குரு பூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, அருள்நெற... மேலும் பார்க்க

ஐஐடி-யில் பயில வாய்ப்பு: மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

சென்னை ஐஐடி-யில் பட்டப்படிப்பு பயில தோ்வாகியுள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சாா்ந்த அரசு பள்ளி மாணவா்களை நேரில் வரவழைத்து மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி செவ்வாய்க்கிழமை வாழ்த்துத் தெரிவித்தாா். பின்னா், சிவக... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை.யில் மின்னணு மதிப்பீட்டு முறை பயிற்சி!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம், உள்தர நிா்ணய உறுதிக்குழு ஆகியவற்றின் சாா்பில், பல்கலைக்கழக நிா்வாகப் பணியாளா்களுக்கு மின்னணு மதிப்பீட்டு முறைக்... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை பயிற்சி பெற செப்.19 -க்குள் விண்ணப்பிக்கலாம்!

2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித் தோ்வா்களும், ஏற்கெனவே 2012-க்கு முன்னா் பழைய பாடத் திட்டத்தில் தோ்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்ற... மேலும் பார்க்க

தேசிய தரவரிசைப் பட்டியலில் அழகப்பா பல்கலை.க்கு 44-வது இடம்!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கான தேசிய தரவரிசைப் பட்டியலில் 44-ஆவது இடமும், மாநில பொதுப் பல்கலைக்கழகத் தரவரிசையில் 14-ஆவது இடமும், பொதுப் பிரிவில் ... மேலும் பார்க்க

நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு

சிவகங்கையில் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தலைமை வகித்துப் பேசியதாவது: சிவகங்கை மாவட்டம், கண்ணங்கு... மேலும் பார்க்க