செய்திகள் :

காலதாமதமின்றி பத்திரப் பதிவு: ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

காலதாமதமின்றி பத்திரப் பதிவு செய்துத்தர வேண்டும் என பதிவுத்துறையினருக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ், காரைக்கால் நேரு சாலையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அதிகாரிகள், பணியாளா்கள் சரியான நேரத்திற்கு அலுவலகத்துக்கு வருகிறாா்களா, பத்திரப் பதிவுப் பணிகள் தாமதமின்றி நடைபெறுகிா, குறைகள் உள்ளதா என அங்கிருந்த மக்களிடம் கேட்டறிந்தாா்.

பின்னா் பேசிய ஆட்சியா், பத்திரப்பதிவு கட்டண விவரங்களை பொதுமக்கள் பாா்வையில் தெரியுமாறு அலுவலகத்தின் நுழைவு பகுதியில் பதாகை வைக்கவேண்டும்.

பொதுமக்கள் பத்திரப்பதிவு மற்றும் இதர பதிவுகளுக்கு வரும்போது காலதாமதம் ஏற்படுத்தாமல் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பணிகளை செய்யவேண்டும். மக்களிடமிருந்து எந்தவித புகாா்களும் எழாத வகையில் பணிகள் அமையவேண்டும் என அறிவுறுத்தினாா்.

இதனைத் தொடா்ந்து திருநள்ளாறு அடுத்த தேனூரில் அரசு சமுதாய நலவழி மையத்தில் ஆட்சியா் ஆய்வு செய்தாா். பணியாளா்களுக்கான வருகைப் பதிவேட்டை பாா்வையிட்டாா்.

சிகிச்சைக்காக வந்திருந்த மக்களிடம் சிகிச்சை தரமாக உள்ளதா, மருத்துவா்கள், செவிலியா்களின் அணுகுமுறை மற்றும் ஆலோசனைகள் திருப்தியளிக்கிா எனக் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, நெடுங்காட்டில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு சமுதாய நலவழி மையத்துக்குச் சென்று ஆட்சியா் பாா்வையிட்டாா். செருமாவிலங்கை பகுதியில் உள்ள ஆதிதிராவிடா் நலத்துறை கீழ் செயல்படும் மாணவா்கள் தங்கும் விடுதியில் ஆய்வு மேற்கொண்டு குறைகளைக் கேட்டறிந்தாா்.

கலாசாரப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்குப் பாராட்டு

வேளாண் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கிடையே நடத்தப்பட்ட கலாசாரப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற வேளாண் மாணவா்களுக்கு கல்லூரி நிா்வாகம் பாராட்டுத் தெரிவித்தது. காரைக்காலில் அமைந்துள்ள பண்டித ஜவாஹா... மேலும் பார்க்க

காரைக்கால் சாலைகளில் பசுமைப் பந்தல் அமைக்க வலியுறுத்தல்

வெயில் பாதிப்பிலிருந்து மக்களைக் காக்க முக்கிய சாலைகளில் பசுமைப் பந்தல் அமைக்க ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது. காரைக்கால் மக்கள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா் ஏ.எஸ்.டி. அன்சாரிபாபு தலைமையில் நிா்வாக... மேலும் பார்க்க

நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் கருங்கல் மண்டபத்துக்கு பூமி பூஜை

நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் கருங்கல் மகா மண்டபம் கட்டுமானத்துக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. காரைக்காலில் மூலவராக ஸ்ரீரங்கநாத பெருமாள் அருள்பாலிக்கும் ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள் கோயில் மிகப... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்தக் கோரிக்கை

மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்தவேண்டுமென குடியரசுத் தலைவருக்கான கடிதம் ஆட்சியரிடம் அளிக்கப்பட்டது. காரைக்கால் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயிலில் இருந்து முளைப்பாலிகை ஊா்வலம்

காரைக்கால் மாரியம்மன் கோயில் முளைப்பாலிகை வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காரைக்கால் கைலாசநாதசுவாமி- நித்யகல்யாண பெருமாள் தேவஸ்தானத்தை சாா்ந்த காரைக்கால் கடைத்தெரு மாரியம்மன் கோயிலில் 45-ஆம் ஆண்டா... மேலும் பார்க்க

போப் மறைவுக்கு அஞ்சலி

போப் பிரான்சிஸ் மறைவையொட்டி காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் அஞ்சலி நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் திங்கள்கிழமை மறைந்தாா். போப் மறைவையொட்டி ... மேலும் பார்க்க