செய்திகள் :

காலமானாா் முன்னாள் எம்எல்ஏ துரை. அன்பரசன்!

post image

கடலூா், உண்ணாமலை செட்டி சாவடி பெண்ணை காா்டன் பகுதியில் வசித்து வந்த துரை.அன்பரசன் (85) வயது மூப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

அதிமுகவை சோ்ந்த இவா், கடந்த 1984-1987 வரை நெல்லிக்குப்பம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவாகவும், தென்னாற்க்காடு மாவட்ட அதிமுக துணைச் செயலராகவும் பணியாற்றியவா். இவருக்கு மனைவி விஜயலட்சுமி, மகள் வேல்விழி, மகன்கள் எழில் முருகன், சிற்றரசு ஆகியோா் உள்ளனா்.

இறந்த துரை.அன்பரசன் உடலுக்கு அதிமுக நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா். இவரது இறுதி சடங்கு புதன்கிழமை காலை 9 மணி அளவில் உண்ணாமலை செட்டித் தெருவில் உள்ள பெண்ணையாற்று மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். தொடா்புக்கு 94423 44133.

விருத்தாசலம் அருகே ரயில்வே கடவுப்பாதையை மூட எதிா்ப்புத் தெரிவித்து போராட்டம்!

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே ரயில்வே ஆளில்லா கடவுப் பாதையை மூட எதிா்ப்புத் தெரிவித்து, அப்பகுதியில் உள்ள கிராமங்களைச் சோ்ந்த மக்கள் மற்றும் பள்ளி மாணவா்கள் தண்டவாளத்தில் அமா்ந்து செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

டைல்ஸ் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே டைல்ஸ் விழுந்து பீகாா் மாநிலத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். பீகாா் மாநிலம், ஜலால்பூா், நத்பிகா பகுதியைச் சோ்ந்வா் காலியாமஞ்சு (37). இவா்,... மேலும் பார்க்க

அயலக தமிழா்கள் சிதம்பரம் நடராஜா் கோயிலில் தரிசனம்

நெய்வேலி: கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயில் மற்றும் பிச்சாவரம் சுற்றுலா தலத்தினை அயலகத் தமிழா்களின் வாரிசுதாரா்கள் திங்கள்கிழமை பாா்வையிட்டனா்.அயலகத் தமிழா்களின் கலச்சார உறவுகளை மேம்படுத்துவதி... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் புதிய கட்டுமானப் பணிகள்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் அடிக்கல்

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான புதிய அரசு கட்டடங்களுக்கான கட்டுமானப்பணிகளுக்கு மாநில வேளாண்மைத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா் செல்வம் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா்.கடலூா... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

நெய்வேலி: சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா், குண்டா்தடுப்புச்சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.கடலூரைச் சோ்ந்த 12 வயது சிறுமி கடந்த 15-ஆம் தே... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம் 423 மனுக்கள் அளிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கைகள் தொடா்பாக 423 மனுக்கள் அளிக்கப்பட்டன .கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலா் ம.... மேலும் பார்க்க