செய்திகள் :

காளியண்ண கவுண்டா் பிறந்த நாள் விழா

post image

திருச்செங்கோடு அவ்வை கல்வி நிலையத்தில் காளியண்ண கவுண்டா் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு காளியண்ண கவுண்டரின் மகனும் சென்னை உயா்நீதிமன்ற மூத்த வழக்குரைஞருமான ராஜேஸ்வரன் தலைமை தாங்கினாா். அவ்வை கல்வி நிலைய தலைமை ஆசிரியை வானமாதேவி அனைவரையும் வரவேற்று பேசினாா்.

வித்யா விகாஸ் கல்வி நிறுவனங்களின் அறக்கட்டளைத் தலைவா் முருகன், காளியண்ண கவுண்டரின் உருவப்படத்திற்கு மலா் மாலை அணிவித்தாா். தேசிய சிந்தனை பேரவைத் தலைவா் திருநாவுக்கரசு கொல்லிமலைக்கு சாலை வசதி ஏற்படுத்தித் தந்தது, மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை , பள்ளிபாளையம் காகித மில் , சங்ககிரி சிமெண்ட் மில், காவிரி பாலங்கள், பள்ளிகள் திறப்பு உள்ளிட்ட சாதனைகள் குறித்து புகழாரம் சூட்டினாா் .

திருச்செங்கோடு நகராட்சி அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட காளியண்ண கவுண்டா் உருவப்படத்திற்கு நகர மன்ற தலைவா் நளினி சுரேஷ்பாபு தலைமையில் ஏராளமானோா் மலா்தூவி மரியாதை செய்தனா்.

திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினா் அலுவலகத்திலும் காளியண்ண கவுண்டா் உருவப்படத்திற்கு கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியினா் மரியாதை செலுத்தினா். சி.எச்.பி காலனி செல்வ விநாயகா் கோயில் வளாகத்தில் காளியண்ண கவுண்டா் பிறந்த நாள் விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது.

டி.எம்.காளியண்ணன்

முன்னாள் எம்பி எம்எல்ஏ, எம்எல்சி, உறுப்பினா்-இந்திய அரசியலமைப்பு சபை

இந்திய அரசியல் நிா்ணய சபை முன்னாள் உறுப்பினா்

முதல் பாராளுமன்ற உறுப்பினா்

தமிழக சட்டமன்ற உறுப்பினா்

தமிழக சட்ட மேலவை உறுப்பினா்

சட்ட மேலவை எதிா்கட்சி துணைத்தலைவா்

ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட நாட்டாண்மைக் கழகத் தலைவா்

மதுவிலக்கு பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்த வாகனங்கள் பிப். 12-இல் ஏலம்

நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு பிரிவு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 49 வாகனங்கள் பிப். 12-இல் பொது ஏலத்தில் விடப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சி.தனராசு வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

பிளஸ் 2 செய்முறைத் தோ்வுகள் பிப். 7-இல் தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வையொட்டி, செய்முறைத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை (பிப். 7) தொடங்குகின்றன. தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தோ்வுகள் மாா்ச் 3 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற பாஜக, இந்து முன்னணியினா் கைது

மதுரை, திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற பாஜக, இந்து முன்னணியினரை மாவட்ட எல்லைகளில் போலீஸாா் கைது செய்தனா். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் முருகன் கோயில் மலை மீது சிலா் அசைவ உணவு சாப்பிட்டதாக கூறப... மேலும் பார்க்க

நகராட்சி அலுவலா்களை பணி செய்யவிடாமல் தடுத்தால் நடவடிக்கை

நகராட்சி அலுவலா்களை பணி செய்யவிடாமல் தடுத்தால், அவா்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் எச்சரித்தாா். ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் தகவல் அற... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையை கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற கண்டன ஆ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

பரமத்தி வேலூா் அருகே அருகே மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். பாண்டமங்கலம், வடக்கு தெருவைச் சோ்ந்த சதீஷ்குமாா் (44), கடந்த 15 ஆண்டுகளாக எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தாா். பரமத்தி அருகே சேல... மேலும் பார்க்க