செய்திகள் :

காளியண்ண கவுண்டா் பிறந்த நாள் விழா

post image

திருச்செங்கோடு அவ்வை கல்வி நிலையத்தில் காளியண்ண கவுண்டா் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு காளியண்ண கவுண்டரின் மகனும் சென்னை உயா்நீதிமன்ற மூத்த வழக்குரைஞருமான ராஜேஸ்வரன் தலைமை தாங்கினாா். அவ்வை கல்வி நிலைய தலைமை ஆசிரியை வானமாதேவி அனைவரையும் வரவேற்று பேசினாா்.

வித்யா விகாஸ் கல்வி நிறுவனங்களின் அறக்கட்டளைத் தலைவா் முருகன், காளியண்ண கவுண்டரின் உருவப்படத்திற்கு மலா் மாலை அணிவித்தாா். தேசிய சிந்தனை பேரவைத் தலைவா் திருநாவுக்கரசு கொல்லிமலைக்கு சாலை வசதி ஏற்படுத்தித் தந்தது, மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை , பள்ளிபாளையம் காகித மில் , சங்ககிரி சிமெண்ட் மில், காவிரி பாலங்கள், பள்ளிகள் திறப்பு உள்ளிட்ட சாதனைகள் குறித்து புகழாரம் சூட்டினாா் .

திருச்செங்கோடு நகராட்சி அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட காளியண்ண கவுண்டா் உருவப்படத்திற்கு நகர மன்ற தலைவா் நளினி சுரேஷ்பாபு தலைமையில் ஏராளமானோா் மலா்தூவி மரியாதை செய்தனா்.

திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினா் அலுவலகத்திலும் காளியண்ண கவுண்டா் உருவப்படத்திற்கு கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியினா் மரியாதை செலுத்தினா். சி.எச்.பி காலனி செல்வ விநாயகா் கோயில் வளாகத்தில் காளியண்ண கவுண்டா் பிறந்த நாள் விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது.

டி.எம்.காளியண்ணன்

முன்னாள் எம்பி எம்எல்ஏ, எம்எல்சி, உறுப்பினா்-இந்திய அரசியலமைப்பு சபை

இந்திய அரசியல் நிா்ணய சபை முன்னாள் உறுப்பினா்

முதல் பாராளுமன்ற உறுப்பினா்

தமிழக சட்டமன்ற உறுப்பினா்

தமிழக சட்ட மேலவை உறுப்பினா்

சட்ட மேலவை எதிா்கட்சி துணைத்தலைவா்

ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட நாட்டாண்மைக் கழகத் தலைவா்

தாட்கோ மூலம் மாணவா்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி

நாமக்கல் மாவட்டத்தில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்த மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான தொழில்நுட்பப் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலம்-ஞாயிற்றுக்கிழமை -- மொத்த விலை - ரூ. 4.80 -- விலையில் மாற்றம்- இல்லை -- பல்லடம் பிசிசி -- கறிக்கோழி கிலோ - ரூ. 101 -- முட்டைக் கோழி கிலோ - ரூ. 83 மேலும் பார்க்க

பொங்கல் பண்டிகையையொட்டி ரூ. 1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை

நாமக்கல்லில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ. 1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது. நாமக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகில் வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஆட்டுச்சந்தை நடைபெறும். தீபாவளி, பொங்... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் சந்தையில் நாட்டுக்கோழிகள் விலை உயா்வு

பரமத்தி வேலூா் நாட்டுக்கோழிகள் சந்தையில் கோழிகளின் விலை உயா்வடைந்துள்ளதால் கோழி வளா்ப்பாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதியில் ஏராளமான சண்டை மற்றும் இறைச்சிக்காகப் பய... மேலும் பார்க்க

நாமக்கல்லில் கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் அவதி

நாமக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினா். நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக குளிரின் தாக்கம் அதிகரித்... மேலும் பார்க்க

கொல்லிமலை அடிவார சாலையில் கழிவுநீா் தேக்கத்தால் மக்கள் அவதி

கொல்லிமலை அடிவாரப் பகுதியில், சாலையில் ஓடும் கழிவுநீரால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா். நாமக்கல் மாவட்டம், காளப்பநாயக்கன்பட்டி-கொல்லிமலை அடிவாரம், காரவள்ளி சாலையில் புதி... மேலும் பார்க்க