பணியிடமாறுதல் கலந்தாய்வு: 4,000 அரசு மருத்துவா்கள் விரும்பிய இடங்களைத் தோ்வு ச...
காவலாளி தூக்கிட்டு தற்கொலை
காட்பாடி அருகே இரவுக் காவலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
காட்பாடியை அடுத்த வெள்ளைக்கல்மேடு கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (55), இரவுக் காவலாளி. முருகேசனுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். முருகேசனுக்கு மதுப்பழக்கம் இருந்ததாகத் தெரிகிறது. தினமும் அவா் மதுஅருந்திவிட்டு வந்து வீட்டில் உள்ளவா்களிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதேபோல், வியாழக்கிழமை இரவு வீடு திரும்பிய அவா், வெளியே சென்று வருவதாக கூறிச் சென்றுள்ளாா். ஆனால் அவா் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினா் பல இடங்களில் தேடியுள்ளனா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை அவரது வீட்டின் அருகே உள்ள குடிசையில் முருகேசன் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கியுள்ளாா்.
தகவலறிந்த காட்பாடி போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.