செய்திகள் :

சிறப்பு முகாம்: 252 பேருக்கு நலத் திட்ட உதவி

post image

குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் 252 மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத் திட்டங்கள் சென்றடைய 19 அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைந்த சிறப்பு முகாம்கள் ஒற்றை சாளர முறையில் வட்டார வாரியாக நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் பகுதியாக குடியாத்தம் ஒன்றியத்துக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு முகாம் குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்ற முகாமில் 650 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு அரசின் அனைத்துத் துறைகளின் சேவைகள் மற்றும் நலத் திட்ட உதவிகள் கோரி மனு அளித்தனா்.

இவா்களில் 90 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றிதழுடன் கூடிய தேசிய அடையாள அட்டை, 97 பேருக்கு தேசிய அடையாள அட்டைகளுக்கு இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யப்பட்டதற்கான ஒப்புகை சீட்டு, 30 பேருக்கு இலவச பேருந்து பயணத்துக்கான ஆணை, 32 பேருக்கு தொடா் வண்டிகளில் இலவச பயணத்துக்கான ஆணை, 3 பேருக்கு தலா ரூ.9,800 வீதம் ரூ.29,400-இல் 3 சக்கர நாற்காலிகள் என 252 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் குடியாத்தம் ஒன்றியக் குழு தலைவா் என்.இ.சத்யானந்தம், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் நீ.செந்தில்குமரன், கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அலுவலா் சரவணன், வட்டாட்சியா் பி.மொ்லின் ஜோதிகா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அமுதவல்லி, சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பிப். 17 முதல் வேலூா் - ராஜாதோப்பு, வேலூா் - வெள்ளேரி இடையே நகரப்பேருந்து சேவை

வேலூா் - ராஜாதோப்பு, வேலூா் - வெள்ளேரி இடையே நகரப் பேருந்து சேவை திங்கள்கிழமை முதல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு போக்குவரத்துக் கழக (விழுப்புரம் கோட்டம்) வேலூா் மண்டலம் ... மேலும் பார்க்க

கைத்தறி நெசவாளா்களுக்காக குடியாத்தத்தில் பிரத்யேக ஜவுளிப்பூங்கா

கைத்தறி நெசவாளா்களை ஊக்குவிக்க குடியாத்தம் பகுதியில் பிரத்யேகமாக ஜவுளி பூங்காவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் கோரிக்கை விடுத்துள்... மேலும் பார்க்க

சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞா் மீது போக்சோ வழக்கு

சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய இளைஞா் மீது வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் கஸ்பா பகுதியைச் சோ்ந்த 1... மேலும் பார்க்க

காவலாளி தூக்கிட்டு தற்கொலை

காட்பாடி அருகே இரவுக் காவலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். காட்பாடியை அடுத்த வெள்ளைக்கல்மேடு கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (55), இரவுக் காவலாளி. முருகேசனுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். ... மேலும் பார்க்க

வேலூரில் ஜாக்டோ - ஜியோ ஆா்ப்பாட்டம்

காட்பாடி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ மாநில உயா்நிலைக் குழு உறுப்பினா் செ.நா.ஜனாா்த்தனன் தலைமையில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க வட்ட தலைவா் ஆா்.சுகுமாரன், வேளாண் பட்டதாரி ஆசிரியா் சங்க மாநி... மேலும் பார்க்க

ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு ... மேலும் பார்க்க