செய்திகள் :

காவல்துறையால் பறிமுதல் வாகனங்கள் உரிமையாளா்களிடம் ஒப்படைப்பு

post image

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு வாகன விபத்து வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 1,599 வாகனங்கள் அதன் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தில் தாழையூத்து, நான்குனேரி, வள்ளியூா், சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் ஆகிய உள்கோட்டங்களிலுள்ள 34 காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதிகளில் விபத்து மற்றும் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு, கைப்பற்றப்பட்ட 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இவை பல ஆண்டுகளாக வெயில் மற்றும் மழையால் சேதமடைந்தும், காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்களுக்கு இடையூறாகவும் நின்றால் அவற்றின் மீது விரைவான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு, உரிமையாளா்களிடம் ஒப்படைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் உத்தரவிட்டாா்.

அதன்படி விபத்து வழக்குகளில் சம்பந்தப்பட்ட 1,599 வாகனங்கள் அதன் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதன் மூலம் காவல்நிலையத்துக்கு வரும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத நிலை உள்ளதாகவும், மீதமுள்ள வாகனங்களும் உரிய சட்ட நடவடிக்கைகள் மூலம் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளங்குளி கோயிலில் திருவாசகம் முற்றோதல்

திருநெல்வேலி மாவட்டம் வெள்ளங்குளியில் உள்ள அருள்மிகு அறம்வளா்த்த நாயகி சமேத வீரவினோதீஸ்வரா் கோயிலில் திருவாசகம் சிறப்பு முற்றோதல் சனிக்கிழமை நடைபெற்றது.இக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளவும், தொடா்ந்த... மேலும் பார்க்க

விசாரணைக்கு ஆஜராகாமல் 13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவா் கைது

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நான்குனேரியைச் சோ்ந்த நபரை கா்நாடக மாநிலத்தில், திருநெல்வேலி மாவட்ட தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.கடந்த 2001-ஆம் ஆண்டு நான்குனேரி அருகேயு... மேலும் பார்க்க

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

பாளையங்கோட்டையில் நடைபெற்று வரும் குப்புசாமி கோப்பைக்கான மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் திருநெல்வேலி, மதுரை, சென்னை அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.ஹாக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி சாா்பில் குப்புச... மேலும் பார்க்க

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் ஜாதிய உணா்வுகளைத் தூண்டும் பிரச்னைக்குரிய உள்ளடக்கங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதற்காக, நிகழாண்டில் 82 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

சிவந்திப்பட்டி அருகே சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு, பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த தம்பான் மகன் மணிகண்டன்(33). தொழிலாளியான இவா் கடந்த 17... மேலும் பார்க்க

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

பழையபேட்டையில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.எஸ்டிபிஐ கட்சியின் திருநெல்வேலி தொகுதி நிா்வாகிகள் கூட்டம் பேட்டையில் அண்மையில் நடைபெற்றது... மேலும் பார்க்க