செய்திகள் :

காவல்துறையின் சோதனை; பறிபோன 4 வயது சிறுமியின் உயிர்; காவலர்கள் பணியிடை நீக்கம்.. என்ன நடந்தது?

post image

கர்நாடக மாநிலம், மாண்டியாவின் மத்தூர் தாலுகாவில் இருக்கிறது கோரவனஹள்ளி. இந்தப் பகுதியைச் சேர்ந்த அசோக் - வாணிஷ்ரி தம்பதியினரின் மகள் ஹிருத்திக்ஷா (4). இவர் தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும்போது நாய் ஒன்று கடித்திருக்கிறது. இதை அறிந்த பெற்றோர் சிறுமியை பைக்கின் முன்பகுதில் அமரவைத்து, அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அப்போது போக்குவரத்துக் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

போக்குவரத்து விதிமீறல்
போக்குவரத்து விதிமீறல்

ஹெல்மெட் இல்லாமல் வேகமாகச் சென்ற அசோக்கை காவல்துறையினர் நிறுத்த முயன்று, பைக்கின் ஹேண்டிலை பிடித்து நிறுத்தியிருக்கின்றனர். இதனால் சமநிலையிழந்த அசோக்கும் அவரின் குடும்பத்தினரும் கீழே விழுந்தனர். இதில் ஹிருத்திக்‌ஷா காயமடைந்தார். உடனே அவரை ஆட்டோவில் மாண்டியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகக் தெரிவித்திருக்கின்றனர்.

அதைத் தொடர்ந்து சிறுமி உயிரிழந்ததற்கு காவல்துறை அதிகாரிகள்தான் காரணம் என அசோக்கின் உறவினர்களும், அவரின் ஊர் மக்களும் சிறுமியின் உடலுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து மூன்று உதவி துணை ஆய்வாளர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

காவல்துறை

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ஹெச்.டி. குமாரசாமி, ``மாண்டியாவில் ஒரு குழந்தையின் மரணம் என்னை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது. போக்குவரத்து போலீசார் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை சோதனை செய்வதை நிறுத்த வேண்டும். அவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்திருந்தால், சிறுமியின் மரணத்தைத் தடுத்திருக்கலாம்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

பொள்ளாச்சி: கொலை வழக்கில் கைதானவர்களிடம் 18 பவுன் நகை, 1.50 லட்சம் பணம் கையாடல்- உதவி ஆய்வாளர் கைது

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ரத்தின சபாபதிபுரம் பகுதியில் ஒரு மனநல காப்பகம் செயல்பட்டு வந்தது. சூலூர் அருகே உள்ள கரவளி மாதப்பூர் பகுதியைச் சேர்ந்த வருண்காந்த் என்ற ஆட்டிசம் பாதிக்கப்பட்ட இளைஞர் இங்கு அன... மேலும் பார்க்க

Tiger: பைக்காரவை தொடர்ந்து முதுமலையில் இறந்து கிடந்த ஆண் புலி... தொடரும் சோகம்!

வங்கப் புலிகளின் வாழிடத்தில் உலக அளவில் மிக முக்கிய பகுதியாக நீலகிரி உயர்ச்சூழல் மண்டலம் விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் முதுமலை& சத்தியமங்கலம் , கேரளாவின் முத்தங்கா, கர்நாடகாவின் பந்திப்பூர் ஆகிய... மேலும் பார்க்க

தூத்துக்குடி: கார் மோதி இளைஞர் பலி; வழக்கிலிருந்து தப்பிக்க காரை விற்ற நால்வர் சிக்கியது எப்படி?

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சிலோன் காலனியைச் சேர்ந்தவர் ரவிராஜ்குமார். இவர், சொந்தமாக போர்வெல் லாரி வைத்துள்ளார். கடந்த 22-ம் தேதி இரவு தனது பைக்கில் தூத்துக்குடியில் இருந்து அவரது... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: போர்க்கப்பல்களை உளவு பார்த்த மும்பை பொறியாளர் கைது; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

மும்பை டாக்யார்டு கப்பல் கட்டும் தளத்தில் இந்தியக் கடற்படைக்குத் தேவையான போர்க்கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் தனியார் நிறுவனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அது போன்ற ஒரு தனியார் நிறுவனத்தில் பணி... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: முன்னாள் காதலியுடனான உறவைத் தட்டிக்கேட்ட மனைவி; விஷ ஊசி போட்டுக் கொன்ற ராணுவ வீரர்

மகாராஷ்டிரா மாநிலம் துலே அருகில் உள்ள வால்வாடி என்ற இடத்தைச் சேர்ந்தவர் கபில் பாகுல். இவரது மனைவி பூஜா(38). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கபில் பாகுல் ராணுவத்தில் கிளார்க்காக இருக்கிறார... மேலும் பார்க்க

சென்னை: "உன் காதலியை மறந்துவிடு" - சினிமா உதவி இயக்குநரைக் கடத்திய கும்பல்; தட்டித் தூக்கிய போலீஸ்

சென்னை அரும்பாக்கம் கோலபெருமாள்பள்ளி தெருவில் வசித்து வருபவர் சினிமா இயக்குநர் சுசீந்திரன். இவரிடம் உதவி இயக்குநராக ராஜகுமரன் என்பவர் பணியாற்றி வருகிறார்.இவரைக் கடந்த 29.5.2025-ம் தேதி மதியம் முதல் கா... மேலும் பார்க்க