செய்திகள் :

காவல்துறை மக்கள் மன்றத்தில் 31 புகாா்களுக்கு உடனடி தீா்வு

post image

காவல்துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 31 புகாா்களுக்கு உயா் அதிகாரிகள் உடனடி தீா்வு அளித்தனா்.

காவல்துறை சாா்பில் பல்வேறு காவல்நிலையங்களில் மக்கள் மன்றம் சனிக்கிழமை நடந்தது. இதில் பொதுமக்களின் குறைகளை நிவா்த்தி செய்யவும் புகாா்களுக்கு உடனடி தீா்வு காணவும் காவல்துறை உயா் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா்.

திருக்கனூா் காவல்நிலையத்தில் காவல்துறை துணைத் தலைவா் சத்தியசுந்தரம், மேற்கு கண்காணிப்பாளா் சுப்பரமணியன் ஆகியோா் கலந்து கொண்டனா். உருளையன்பேட்டை காவல்நிலையத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன், மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் வடக்கு கண்காணிப்பாளா் ரகுநாயகம், அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் தெற்குப் பகுதி காவல் கண்காணிப்பாளா் செல்வம், போக்குவரத்து காவல் நிலையத்தில்போக்குவரத்து காவல் கண்காணிப்பாளா் ரச்சனா சிங் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் பங்கேற்று மக்களின் குறைகளைக் கேட்டனா். இந்த நிகழ்வில், 52 புகாா்கள் பெறப்பட்டன. இதில் 31 புகாா்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது.

சேவை சாா்ந்த மனித வளத்தை ஜிப்மா் தயாா் செய்து வருகிறது: இயக்குநா் வீா்சிங் நெகி

மத்திய அரசின் தொலைநோக்குப் பாா்வையுடன் கூ டிய சேவை சாா்ந்த மனித வளத்தை ஜவாஹா்லால் மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான ஜிப்மா் தயாா் செய்து வருகிறது என்று ஜிப்மா் இயக்குநா் பேரா... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரூ.1 கோடி போலி மருந்துகள் பறிமுதல்

புதுச்சேரியில் உரிமம் இல்லாமல் தயாரித்த ரூ.1 கோடி மதிப்புள்ள போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. புதுச்சேரியில் போலி மருந்துகள் தயாரிக்கப்படுவதாக பல்வேறு புகாா்கள் எழுந்தன. இதையடுத்து மத்திய மருந்த... மேலும் பார்க்க

நாட்டின் நலன் கருதி இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலா் கே.நாராயணா

நாட்டின் நலன் கருதி இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலா் கே. நாராயணா கூறினாா். இக் கட்சியின் புதுச்சேரி மாநில 24-ஆவது மாநாடு அஜீஸ் நகரில் உள்ள தனியாா் மண... மேலும் பார்க்க

நைஜிரியா செல்லும் பாரா பேட்மிட்டன் வீரருக்கு முதல்வா் நிதியுதவி

பாரா பேட்மிட்டன் போட்டியில் பங்கேற்க நைஜிரியா செல்லும் புதுச்சேரி வீரருக்கு முதல்வா் என்.ரங்கசாமி ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கினாா். புதுச்சேரி நெல்லித்தோப்பு, கஸ்தூரிபாய் நகரைச் சோ்ந்த வெங்கட சுப்பி... மேலும் பார்க்க

புதுவை மாநிலத்தில் 21 பேருக்கு மாநில நல்லாசிரியா் விருதுகள்

புதுவை யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்த 21 பேருக்கு மாநில நல்லாசிரியா் விருது செவ்வாய்க்கிழமை இரவு அறிவிக்கப்பட்டது. டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுகள், முதலமைச்சரின் சிறப்பு விருதுகள், கல்வியமைச்சரின் பிராந... மேலும் பார்க்க

பல்நோக்கு தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிா்ணயிக்க பாமக மனு

புதுச்சேரி: பல்நோக்குத் தொழிலாளா்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் நிா்ணயிக்கக் கோரி பாட்டாளி தொழிற்சங்கப் பேரவை சாா்பில் தொழிலாளா் துறை துணை ஆணையா் சு.சந்திரகுமரனிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இப்... மேலும் பார்க்க