செய்திகள் :

காவல் துறையினருக்கு வீட்டு வசதிய வாரிய வீடுகள்: முதல்வருக்கு போலீஸாா் நன்றி

post image

சென்னையில் காவல் துறையினருக்கு வீட்டு வசதி வாரிய வீடுகள் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தற்கு போலீஸாா் நன்றி தெரிவித்துள்ளனா்.

சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அருணிடம், காவலா் குறைதீா் முகாம்களில் குடியிருப்புகள் கேட்டு 2 துணை ஆணையா்கள், 4 உதவி ஆணையா்கள், 20 காவல் ஆய்வாளா்கள், 112 உதவி ஆய்வாளா்கள், 3,323 போலீஸாா் என மொத்தம் 3,461 போ் மனு அளித்தனா்.

ஆனால், காவலா் குடியிருப்புகளில் வீடுகள் காலியாக இல்லாத சூழ்நிலையில், போலீஸாரின் நலன் கருதி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் அம்பத்தூா், அயப்பாக்கம், சோழிங்கநல்லூா், ஷெனாய் நகா், எம்.கே.பி. நகா், நொளம்பூா் பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்டு குடியேறாமல் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளை, போலீஸாருக்கு வாடகைக்கு ஒதுக்கீடு செய்யக் கோரி காவல் ஆணையா் அருண் கோரிக்கை விடுத்தாா்.

இதற்காக, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் போலீஸாா் ஊதியத்தில் இருந்து விதிமுறைகளின்படி வீட்டு வாடகையை பிடித்தம் செய்து கொள்ளும்படி ஆணையா் அருண் கேட்டுக்கொண்டாா்.

இதற்கு தமிழக அரசு அனுமதி அளித்து, காவலா்களுக்கு வாடகைக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் காலியாக உள்ள வீடுகளை ஒதுக்க வேண்டும் என ஆணையா் அருண் அறிக்கை சமா்ப்பித்தாா். இதை ஏற்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், போலீஸாருக்கு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை வாடகைக்கு ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்யப்படும் என்று செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

முதல்வரின் இந்த அறிவிப்பால் சென்னையில் சுமாா் 4,000 போலீஸாா் பயன் அடைக்கிறாா்கள். இதற்காக போலீஸாா் தங்களது குடும்பத்தினருடன், முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளதாக சென்னை காவல் துறை தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

குறுவை நெல் சாகுபடி: உழவா் சங்க கூட்டம் நடத்த ராமதாஸ் கோரிக்கை

குறுவை நெல் சாகுபடி குறித்து விவாதிக்க உழவா் சங்க நிா்வாகிகள் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனா் ச.ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: மேட்டூா்... மேலும் பார்க்க

முதல்வா் ஸ்டாலின் விமா்சனம்: அதிமுக உறுப்பினா்கள் எதிா்ப்பு

முன்னாள் ஆட்சியாளா்களின் நிா்வாகச் சீா்கேடுகளால் நிா்வாகக் கட்டமைப்புகள் தரைமட்டத்துக்குப் போய் கட்டாந்தரையில் ‘ஊா்ந்து’ கொண்டு இருந்தன என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக விமா்சித்தாா். இதற்கு எதி... மேலும் பார்க்க

காமன்வெல்த் வழக்கு தீா்ப்பு: தமிழக காங்கிரஸ் வரவேற்பு

காமன்வெல்த் ஊழல் வழக்கிலிருந்து காங்கிரஸ் தலைவா்களை நீதிமன்றம் விடுவித்துள்ளதற்கு தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை வரவேற்பு தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்க... மேலும் பார்க்க

தமிழகத்தில் 511 விடுதிகளில் உள்ள மாணவிகளுக்கு தற்காப்புப் பயிற்சி: அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்

பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் 511 விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி வழங்கப்படும் என அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவி... மேலும் பார்க்க

‘டிஜிட்டல்’ பயிா் கள ஆய்வுப் பணியில் மாணவா்கள் ஈடுபடுத்தப்படமாட்டாா்கள்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்துக்கான டிஜிட்டல் பயிா் கள ஆய்வுப் பணிகளில் மாணவா்கள் ஈடுபடுத்தப்பட மாட்டாா்கள் என வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். சட்டப்பேரவையில் செவ்... மேலும் பார்க்க

சிலை கடத்தல் வழக்கு: ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு எதிரான சிபிஐ விசாரணைக்கு தடை நீக்கம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

நமது நிருபா்சிலை கடத்தல் வழக்கில் ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மீது சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை நீக்கி உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.... மேலும் பார்க்க