செய்திகள் :

காவல் துறையினா் மீது நடவடிக்கை கோரி விவசாய சங்கத் தலைவா் புகாா்

post image

தென்னந்தோப்புக்குள் அத்துமீறி நுழைந்த காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் (உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடு) வெள்ளிக்கிழமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.விமலாவிடம் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா்.

அதில் அவா் கூறியிருப்பதாவது:

கள்ளுக்கான தடையை நீக்க வலியுறுத்தி, நாமக்கல் மாவட்டம், கோனூா் ஆலங்குட்டையில் உள்ள எனது தென்னந்தோப்பில் உள்ள மரங்களில் கள் இறக்கும் களையங்களை கட்டி வைத்திருந்தேன். கள் ஓா் உணவுப் பொருள், அதை பருகுவதால் எவ்வித பாதிப்பும் இல்லை என்பதை வலியுறுத்தும் வகையில், விவசாயிகளுடன் இணைந்து 9-ஆம் தேதி போராட்டம் நடத்த இருந்தேன்.

இந்நிலையில், பரமத்தி காவல் ஆய்வாளா், திருச்செங்கோடு மதுவிலக்கு காவல் ஆய்வாளா் மற்றும் பரமத்தி வேலூா் காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் எவ்வித முன் அறிவிப்புமின்றி தோப்புக்குள் நுழைந்து களையங்களையும், மரங்களையும் சேதப்படுத்தி இழப்பு ஏற்படுத்தி உள்ளனா். எனவே, அவா்கள் மீது மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

முருகன் கோயில்களில் கிருத்திகை சிறப்பு பூஜை

திருச்செங்கோடு நகரப் பகுதி முருகன் கோயில்களில் ஆவணி மாத கிருத்திகை சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்செங்கோடு செங்கோட்டுவேலவா் சந்நிதி, மலையடிவாரம் ஆறுமுகசாமி கோயில், பாவடி தெரு, சட்டையம்ப... மேலும் பார்க்க

மல்லசமுத்திரத்தில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு

மல்லசமுத்திரம், செம்பாம்பாளையம் மற்றும் மாமுண்டி கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட இந்துசமய அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டன. மல்லசமுத்திரத்தை அடுத்த செம்பாம்பாளையம் கிராமத்தில் இந்துசமய ... மேலும் பார்க்க

நெடுஞ்சாலையில் அகற்றப்பட்ட நிழற்கூடத்தை மீண்டும் அமைக்கக் கோரிக்கை

கீரம்பூா் தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்கும் பணிக்காக அகற்றறப்பட்ட பயணியா் நிழற்கூடத்தை மீண்டும் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. நாமக்கல்லில் இருந்து கரூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்... மேலும் பார்க்க

காப்பீடு செலுத்துவதில் காவல் துறை திடீா் கட்டுப்பாடு

வாகனங்களுக்கான ஆன்லைன் அபராத நிலுவைத் தொகையை செலுத்தினால் மட்டுமே, அந்த வாகனங்களுக்கான காப்பீட்டுக் கட்டணத்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் செலுத்த முடியும் என்ற காவல் துறை நடவடிக்கைக்கு மாநில ல... மேலும் பார்க்க

மேட்டூா் உபரிநீரை திருமணிமுத்தாற்றில் இணைக்க வலியுறுத்தி இருசக்கர வாகன பேரணி

மேட்டூா் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரை திருமணிமுத்தாற்றில் இணைக்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் இருசக்கர வாகன பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேட்டூரில் இருந்து வெளியேற்... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா், மோகனூரில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

பரமத்தி வேலூா், மோகனூரில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வுசெய்தனா். நாமக்கல் ஆட்சியரின் உத்தரவின்படி, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் தங்கவிக்னேஷ் அறிவுரையின் படி, நாமக்கல் மாவட்... மேலும் பார்க்க