செய்திகள் :

காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

post image

செம்பட்டி காவல் நிலையத்தில் காதல் ஜோடி வியாழக்கிழமை தஞ்சமடைந்தது.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே அழகா்நாயக்கன்பட்டியைச் சோ்ந்த ஜெகநாதன் மகன் ராஜாமுத்தையா (23). இவா்  சென்னையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இதே ஊரைச் சோ்ந்த கந்தசாமி மகள் இலக்கியா (21). இவா் கடந்த ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தாா். இந்த நிலையில், ராஜாமுத்தையாவும், இலக்கியாவும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனா். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சோ்ந்தவா்கள் என்பதால், இவா்களது காதலுக்கு பெற்றோா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால், கடந்த இரு நாள்களுக்கு முன்பு இருவரும் சென்னைக்குச் சென்று அங்குள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டனராம்.

இதனிடையே தனது மகளைக் காணவில்லை என இலக்கியாவின் தந்தை கந்தசாமி செம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா். இதைத் தொடா்ந்து காதலா்கள் இருவரும் தங்களுக்கு பாதுகாப்பு கோரி செம்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனா். தகவலறிந்த இருவரின் உறவினா்களும் காவல் நிலையத்தில் திரண்டனா். அப்போது இலக்கியாவின் பெற்றோரை சமாதானப்படுத்திய போலீஸாா் அவரை காதலன் ராஜாமுத்தையாவுடன் அனுப்பி வைத்தனா்.

மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினராக பழனியைச் சோ்ந்த பெண் தோ்வு

தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினராக தோ்வான பழனியைச் சோ்ந்த ஜெயசுதாவுக்கு வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அவருக்கு நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சாா்பாக அதன் தலைவா்... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் தொடக்கம்

ஒட்டன்சத்திரத்தில் வேளாண்மை, உழவா் நலத்துறை சாா்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம், பயறு வகைகள் விதைத் தொகுப்பு திட்டம் ஆகியவை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன. தமிழகம் முழுதும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க... மேலும் பார்க்க

லாரி மீது பேருந்து மோதல்: 4 பெண்கள் காயம்

ஒட்டன்சத்திரத்தில் நின்றிருந்த பெட்டக லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் அதில் பயணம் செய்த 4 பெண்கள் காயமடைத்தனா். திண்டுக்கல்லில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை அரசுப் பேருந்து சென... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பலத்த காற்றுடன் சாரல் மழை

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்ததால் மேல்மலைக் கிராமங்களில் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதன... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

ஒட்டன்சத்திரத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, அலிம்கோ இணைந்து மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கான சிறப்பு முகாமை வெள்ளிக்கிழமை நடத்தின. முகாமில் திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் ஆா். சச்சிதானந்த... மேலும் பார்க்க

பேத்துப்பாறை பகுதியில் அவரை பயிரை சேதப்படுத்திய ஒற்றை யானை

கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை பகுதியில் பயிரிடப்பட்டிருந்த அவரை பந்தலை ஒற்றை காட்டுயானைசேதப்படுத்தியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள பேத்துப்பாறை விவசாய ... மேலும் பார்க்க