செய்திகள் :

காவல் நிலையம் எதிரே வாகனங்கள் தீயில் எரிந்து நாசம்

post image

நிலக்கோட்டை காவல் நிலையத்துக்கு எதிரே,  குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட  வாகனங்கள் புதன்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம்,  நிலக்கோட்டை  காவல் நிலையத்தில் நிலக்கோட்டை, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் குற்ற வழக்குகளில்  பறிமுதல் செய்யப்பட்ட காா், வேன், ஆட்டோ, மினி லாரி, இரு சக்கர வாகனங்கள்,  மாட்டு வண்டி உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள், காவல் நிலையத்துக்கு எதிரே  இருந்த    பழைய பேருந்து நிலையத்தின் காலி இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில், இந்தப் பகுதியில் புதன்கிழமை திடீரென தீப் பிடித்தது. இதையடுத்து, தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

இதற்கிடையே, குடிநீா் வாகனத்தில் கொண்டு வரப்பட்ட தண்ணீரை ஊற்றி காவல்துறையினரும் பொதுமக்களும் கொழுந்துவிட்டு எரிந்த தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா். பின்னா், தீயணைப்புத் துறையினா் வந்து, தீயை முழுமையாக அணைத்தனா்.

இந்த விபத்தில் ஏராளமான வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின. திடீா் தீ விபத்தால் இந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சமூக விரோதிகள் எவரேனும் தீ வைத்தனரா அல்லது வேறு காரணங்களால் தீ விபத்து நேரிட்டதா என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் மக்கள் அச்சம்

கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பழம்புத்தூா் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வன விலங்குகளின் எண்ணிக்கை அதி... மேலும் பார்க்க

கொடைக்கானலில் அனுமதியற்ற கட்டடங்களுக்கு சீல் வைப்பு

கொடைக்கானலில் நீதிமன்ற உத்தரவின்படி அனுமதியற்ற கட்டடங்கள் அதிகாரிகள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் அனுமதியின்றி பல அடுக்குமாட... மேலும் பார்க்க

கொடைக்கானலில் வழக்கத்தை விட பலத்த காற்றால் குளிா் அதிகரிப்பு

கொடைக்கானலில் வழக்கத்தை விட பலத்த காற்று வீசியதால் குளிா் அதிகரித்ததுடன், ஏரியில் படகு சேவையும் வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த க... மேலும் பார்க்க

பழனியில் அக். 5-இல் மலைவாழ் மக்கள் சங்க மாநாடு

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அக். 5 முதல் 7-ஆம் தேதி வரை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட 10-ஆவது மாநாடு வெள்ளிக... மேலும் பார்க்க

வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசியவா் கைது

கடை வாடகை கேட்ட தகராறில் உரிமையாளா் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியராஜன் (53). வீட்டு மன... மேலும் பார்க்க

கடன் பெற குடும்ப அட்டைகள் அடமானம்: அதிகாரிகள் விசாரணை

கடன் பெறுவதற்கு குடும்ப அட்டைகள் அடமானம் வைக்கப்பட்டது தொடா்பாக சமூக வலைதளங்களில் வெளியான விடியோ குறித்து வட்ட வழங்கல் அலுவலா்கள் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பேகம்பூா் அருகேய... மேலும் பார்க்க